வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]

பில்லியன் கணக்கான பயனர்களைப் கொண்ட வாட்ஸ்அப்பில், வரும் காலங்களில் விளம்பரங்கள் தோன்றவுள்ளன என்று மெட்டா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருப்பினும் தனிப்பட்ட அரட்டைகள், அழைப்புகள், குழு உரைகள் ஆகியவை விளம்பரமில்லாமல் இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. பயனரின் அனுபவத்தை பாதிக்காமல், தளத்தை வருவாயின் மூலமாக மாற்றும் நோக்கத்தில் மெட்டா இந்த புதிய முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரைகள், அழைப்புகள், ஸ்டேட்டஸ்கள் அனைத்தும் குறியாக்கம் செய்யப்பட்டவை என்றும், அவை விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படமாட்டாது […]

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஐசிடி அகாடமி மூலம் திறன் பயிற்சி வழங்கப்பட்டது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனம் (ஐசிடி அகாடமி), மாணவர், ஆசிரியர் திறன் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் – கல்லூரிகளின் ஒருங்கிணைப்பு ஆகிய பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதன்மூலம் ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த 7,533 ஆசிரியர்களுக்கு […]

இன்று மதியம் திடீரென ஜியோ நெட்வொர்க் முடங்கியதால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதியடைந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ இருந்து வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் ஜியோ நெட்வொர்க்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியா முழுவதும் உள்ள ரிலையன்ஸ் ஜியோ பயனர்கள் பரவலான நெட்வொர்க் பிரச்சனைகளை சந்திப்பதாக புகாரளித்து வருகின்றனர். இணைய இணைப்பு, மொபைல் சிக்னல்கள் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகள் தொடர்பான சிக்கல்கள் குறித்து புகார் கூறி உள்ளனர்.. […]

ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதி சில காலமாக இருந்து வந்தாலும், கூகிள் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல உதவும். அந்தவகையில், கூகுள், Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முன்கூட்டிய பூகம்ப எச்சரிக்கைகளை […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள், விமான ஊழியர்கள் என 240க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய விமானத்துறையின் வரலாற்றில் மீண்டும் கரும்புள்ளி வைத்தது போல் மாறிவிட்டது. இப்பெரும் துயரச் சம்பவத்தின் இடம் இன்னும் சிதைந்த உலோகங்களும் புகை மூட்டத்துடனும் இருக்க, மீட்பு படையினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். […]

ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை […]

UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]