மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். ஆதார் சட்டம் 2016 பிரிவு 7ன் கீழ், மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். முதல் 100 யூனிட்டை இலவசமாக பெறும் வீட்டு நுகர்வோர், இலவச மின்சாரம் பெறும் குடிசை நுகர்வோர் மற்றும் விவசாயிகள், 750 யூனிட் இலவச மின்சாரம் பெறும் விசைத்தறி நுகர்வோர் மற்றும் […]

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்த நிலையில், வாரத்தின் 4-ஆம் நாளான இன்று தங்கம் விலை சரிந்து காணப்படுகிறது. தங்கம் பெண்களுக்கு பிடித்தமான ஒன்று. தினசரி ஏற்ற இறக்கத்துடன் கண்ணாமூச்சி ஆடி வந்தாலும், தங்கத்தின் மீதான மோகம் மட்டும் மக்களுக்கு குறையவில்லை. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து […]

ரேஷன் கார்டு என்பது இந்திய குடிமக்களின் ஒரு முக்கியமான அடையாள ஆவணமாகும். இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் மளிகை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த அடையாள ஆவணம் இல்லாவிட்டால் மலிவு விலையில் உங்களால் பொருட்களை வாங்க முடியாது. இதுவரை ரேஷன் கார்டு பெறுவது அவ்வளவு சுலபமானதாக இருந்ததில்லை. இதற்காக பல இடங்களுக்கு பல மணி நேரங்கள் செலவு செய்து அலைந்து திரிய வேண்டும். ஆனால், இப்பொழுது ரேஷன் […]

ஒருமுறையாவது வெளிநாடு சென்று சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. ஆனால், வெளிநாடு என்று சொன்னதுமே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது பாஸ்போர்ட் மற்றும் விசா தான். பாஸ்போர்ட் இருந்தால் தான் நம்மால் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும். ஆனால் எல்லா நாடுகளுக்கும் பாஸ்போர்ட் வேண்டியதில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் நாம் சுற்றி பார்க்க சில நாடுகள் உள்ளது. ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு பயணிக்க சில நாடுகள் உங்களை […]

மாநிலங்கள் மற்றும் உள்ளூர் சமூக அமைப்புகளின் கூட்டு செயல்பாட்டுடன் கல்வியில் பாலின சமத்துவத்தை அடைவதற்கான நடைமுறைகளை இது பரிந்துரைக்கிறது. சமக்ரா சிக்ஷா திட்டத்தின் 2-வது கட்டத்தின் கீழ், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண் குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதற்கான நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் மூலமாக பள்ளிக் கல்வியில் பாலின இடைவெளியைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், மேற்கொள்ளப்பட்டுள்ளன. மொத்தம் 5,646 கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு 6,69,000 […]

காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer (Group – I C Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 13ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TNPSC District Educational Officer காலியிடங்கள்: 11 இதில் பொதுவகை பிரிவினருக்கு 9 இடங்களும், அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் […]

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முன்னதாக, நடப்பு கல்வியாண்டு (2022-23) முதல் புதிய பாடத் திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியது. இதன் கீழ், இளம்நிலை பொறியியல் படிப்புகளில் முதல் 2 பருவங்களில் தமிழர் மரபு, தமிழரும்-தொழில்நுட்பமும் ஆகிய 2 கட்டாயப்பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த தமிழ் பாடங்களைக் கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான […]

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தின்‌ மூலம்‌ மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000 பெறும்‌ அனைத்து மாற்றுத்திறனாளிகளும்‌ ஆதார்‌ எண்ணை சமர்ப்பிக்க வேண்டும்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில் தருமபுரி மாவட்டத்தில்‌, மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2,000/- பெற்று வரும்‌ மனவளர்ச்சி குன்றியோர்‌, கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள்‌ தொழுநோயால்‌ பாதிக்கப்பட்டு குணமடைந்தோர்‌, தசைசிதைவு நோயால்‌ பாதிக்கப்பட்டோர்‌, முதுகு தண்டு வடம்‌, பார்க்கின்சன்‌ மற்றும்‌ நாள்பட்ட நரம்பியல்‌ நோயால்‌ […]

சொந்தமாக வீடு கட்டி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என அனைவருக்கும் கனவு இருக்கும். அந்த கனவை நிறைவேற்ற, அதற்கான உழைப்பும், முயற்சியும் கட்டாயம் அவசியமாகும். வீடு கட்டும் யோகம் வந்து விட்டது. சொந்த வீடு கட்டலாம் என முடிவு செய்தாலும், தற்போதைய காலத்தில் நிலவும் கட்டுமானப் பொருட்களின் விலை, தலை சுற்ற வைப்பதாக இருக்கிறது. எனவே, கட்டுமானப் பொருட்களின் விலைவாசி, வீட்டு உபயோகப் பொருட்களின் விலைவாசி போன்றவற்றை கருத்தில் […]

நாடாளுமன்றத்தில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் என்ன என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அந்த வகையில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மத்திய அரசின் அடல் வயோ ஸ்ரீ அபியுதய் என்ற திட்டத்தை அமல்படுத்தி அந்த திட்டத்தின் கீழ் இரு வேறு திட்டங்களான ராஷ்ட்ரிய வயோ ஸ்ரீ ஆகியவை இணைந்து செயல்படுத்தி வருகின்றனர். இந்த இரு திட்டத்தின் கீழ் செயல்படும் காப்பகங்கள் மூலம் மூத்த […]