பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை. மேலும், போலிப் பத்திரப்பதிவும் ஒழிந்திருக்கிறது. போலி பத்திரப்பதிவு […]

மகளிர் உரிமைத்தொகை பெற குறைந்தபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கப்பட உள்ளதாகவும், இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் […]

தக்காளியின் உற்பத்தி குறைந்ததால் தமிழ்நாட்டில் தக்காளியின் விலை அதிகரிக்க தொடங்கியது. நேற்று சென்னை கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், தக்காளியின் விலையை குறைக்க வேண்டும் என இல்லத்தரசிகள் கோரிக்கை விடுத்தனர். அனைத்து வீடுகளிலும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் தக்காளியின் விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இந்த […]

தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், […]

இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் முடிவடைய இருக்கிறது. ஜூலை மாத தொடக்கத்தில் உங்களுடன் தொடர்புடைய பல்வேறு விஷயங்கள் மாற வாய்ப்பு உள்ளது. அதன்படி, எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் மாதந்தோறும் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாற்றி வருகின்றன. வணிக சிலிண்டர்களின் விலையானது ஏப்ரல், மே மற்றும் ஜூன் முதல் தேதியில் குறைக்கப்பட்டது. எனினும் கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை. இந்த முறை வணிக ரீதியாக […]

டிஎன்பிஎஸ்சி உதவி செயலர் பிரிவில் 59 காலியிடங்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த மே மாதத்துடன் அதற்கான காலகடு முடிவடைந்த நிலையில், வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி இதற்கான தேர்வு நடைபெற இருக்கிறது. தற்சமயம் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டிருப்பதாகவும் தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று அந்த ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் […]

சென்னை மாநகராட்சியில் கடந்த 2022-23 நிதியாண்டுக்கான சொத்து வரியை மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளவர்களுக்கு, வரித்தொகை மீது மாதத்துக்கு ஒரு சதவீதம் தனிவட்டி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய நகரமான சென்னையில் தான் ஆறில் ஒரு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். கிட்டத்தட்ட 2 கோடி மக்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சிக்குள்ளேயே ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கின்றனர். மிக […]

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பச்சை மிளகாய் தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய தக்காளி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. உதாரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு வெளி மாநிலங்களில் இருந்து 1,200 டன் தக்காளி வரவேண்டும். ஆனால், வெறும் […]

நாடு முழுவதும் இருக்கின்ற அனைத்து மாநிலங்களிலும் பருத்திப்பதுக்கலை தடுக்கும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் துவரம் பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு உள்ளிட்டவற்றின் கொள்முதல் நாட்டில் குறைந்திருப்பதால் அதன் விலை அதிகரித்து இருக்கிறது. இத்தகைய நிலையில் தான் மத்திய அரசு ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு எளிதாக பருப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாநிலங்களில் இருக்கும் இருப்பு நிலையை கண்காணித்து பருப்பு பதுக்கலை […]

மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது இனிவரும் காலங்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு கூடுதலாக பணம் வாங்க கூடாது அப்படி வாங்கினால் அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்கினால் பில் வழங்கும் விதத்தில் மிக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக […]