சர்வதேச அரசியல் களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்து இருப்பதை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், […]

அமெரிக்கா, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் , ரஷ்யாவுக்கு எதிரான இரு கட்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ள ரஷ்யா மீதான தடைகள் மசோதா (Russia Sanctions Bill) என்ற சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா அமலுக்கு வந்தால், ரஷ்யாவுடன் தெரிந்தே எண்ணெய் மற்றும் எரிசக்தி வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு […]

பாஜக தலைவர் அமித் மால்வியா அமெரிக்க அரசு ஆவணங்களை வெளியிட்டு, 2025 ஏப்ரலில் இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தான் எவ்வளவு பதற்றமடைந்தது என்பதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை, பாகிஸ்தானை கடுமையாகக் குலுக்கியதாகவும், அதனால் அவர்கள் அமெரிக்க அரசிடம் போர் நிறுத்தம் கோரி மன்றாடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் மால்வியா வெளியிட்ட தகவல் […]

இந்திய பொருளாதாரத்திற்கும், சாமானிய வாகன ஓட்டிகளுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் அதிரடி வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவாக, 2026 ஜனவரியில் இந்திய கச்சா எண்ணெய் கூடையின் சராசரி விலை பீப்பாய்க்கு $59.92 ஆக குறைந்துள்ளது. பிப்ரவரி 2021-க்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை இந்த மைல்கல்லை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. உலகளவில் விநியோகம் அதிகரித்ததும், அதே சமயம் […]

இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் புதன்கிழமை அன்று சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுபவர்கள் நாடு கடத்தப்படலாம் என்றும், அவர்களின் விசா ரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அமெரிக்கச் சட்டங்களை மீறுவது அல்லது கைது செய்யப்படுவது மாணவர் விசாவை ரத்து செய்ய வழிவகுக்கும், நாடு கடத்தப்பட நேரிடும் அல்லது எதிர்காலத்தில் அமெரிக்க விசாக்களுக்கு சர்வதேச மாணவர்கள் தகுதியற்றவர்களாக மாற்றிவிடும் என்று தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் […]

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் வெனிசுவேலாவிற்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையின் பின்னர், அந்நாட்டு முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பெட்ரோ “வந்து என்னை பிடியுங்கள், நான் காத்திருக்கிறேன்” என்று ட்ரம்புக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். கொலம்பிய அதிபரைப் பற்றி ட்ரம்ப் கூறியது என்ன? இதற்கு […]

வங்கதேசத்தில் சரத் மணி சக்ரபர்த்தி என்ற 40 வயது இந்து நபர் கொல்லப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் வங்கதேசத்தில் நடந்த 2-வது சம்பவம் இதுவாகும். மேலும், நாட்டில் தொடரும் அமைதியின்மைக்கு மத்தியில், வெறும் 18 நாட்களில் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது நடத்தப்பட்ட 6வது கொடிய தாக்குதல் இதுவாகும். மளிகைக் கடை உரிமையாளரான சரத் மணி, திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதாகக் […]

வெனிசுலா மதுரோவும் அவரது மனைவியும் குற்றமற்றவர்கள் என்று ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு வெனிசுலா அதிபர் மாளிகை அருகே கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவம் பதிவாகியுள்ளது. வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததைத் தொடர்ந்து, துணை அதிபர் டெல்சி ரொட்ரிக்ஸ் இடைக்கால அதிபராக பதவியேற்றுள்ளார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களில், தலைநகர் காரகாஸில் திடீர் துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் […]

உலகளாவிய சுற்றுலாத் தலமான இந்தோனேசியா, சமீபத்தில் ஒரு புதிய சட்டத்தின் காரணமாக பேசுபொருளாகியுள்ளது. அந்நாட்டு அரசாங்கம் பல தசாப்தங்களாக நீடித்து வந்த டச்சு காலனித்துவ காலச் சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு புதிய உள்நாட்டுத் தண்டனைச் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தனிப்பட்ட வாழ்க்கை முறைகள் தொடர்பான முக்கிய மாற்றங்களை கொண்டுள்ளது. புதிய தண்டனைச் சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் பாலியல் உறவு கொள்வது குற்றமாகும். மேலும், திருமணம் செய்யாமல் […]

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வசிக்கும் ஓஹியோ மாநில இல்லத்தில் திங்கள்கிழமை தாக்குதல் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீஸார் காவலில் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் உள்ளூர் செய்தி ஊடகங்களிலும் வெளியான புகைப்படங்களில், வான்ஸ் இல்லத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆனால், இந்த தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது, இதற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெளிவான […]