சர்வதேச பொருளாதார சூழலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த விலையிறக்கம் முடிவுக்கு வந்து, ஒரே நாளில் முதலீட்டாளர்களை மலைக்க வைக்கும் வகையில் விலையேற்றம் அரங்கேறியுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) விலையில் $118.55 வரை உயர்ந்து, தற்போது $4,953.03 என்ற நிலையை எட்டியுள்ளது. தங்கத்தை […]

தாவரங்கள் தங்களைச் சுற்றியுள்ள காற்றுடன் எப்போதும் ஒரு அமைதியான, கண்ணுக்குத் தெரியாத பரிமாற்றத்தைச் செய்து வருகின்றன. இந்த செயல்முறையை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகப் புரிந்துகொண்டிருந்தாலும், அதை உண்மையாக காண முடியவில்லை. இப்போது அது மாறியுள்ளது. இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு முன்னோடி அமைப்பை உருவாக்கியுள்ளனர். இது தாவரங்களின் சுவாச செயல்முறை நிகழும் போது உற்றுநோக்கவும் பதிவு செய்யவும் விஞ்ஞானிகளை அனுமதிக்கிறது. இது தாவரங்கள் எவ்வாறு வளர்கின்றன, உயிர் வாழ்கின்றன […]

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக சதி செய்வதிலிருந்து இன்னும் பின்வாங்கவில்லை. பாகிஸ்தான் மக்களை வறுமையிலிருந்து மீட்கத் தவறிய திறமையற்ற ஷெபாஸ் அரசாங்கம், கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இத்தகைய பரிதாபகரமான நிதி நிலையில் இருந்தபோதிலும், ஆசிம் முனீர் பயங்கரவாதிகளின் ஒரு படையை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. ‘காதக்’ (கொலையாளி) என்று அழைக்கப்படும் ஒரு பிரிவு ஜம்மு ராஜௌரி எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது, […]

இந்த பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பசி எடுக்கும். ஒவ்வொரு உயிரினமும் அதன் இனத்தைப் பொறுத்து வெவ்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுகின்றன. இருப்பினும், சில விலங்குகள் எதையும் சாப்பிடுவதில்லை, அவை உயிர்வாழ்வதற்காக மற்ற உயிரினங்களின் இரத்தத்தை மட்டுமே குடிக்கின்றன. ரத்தம் குடிக்காமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. இருப்பினும், அவை மிகவும் ஆபத்தானவை அல்ல, அவை உயிர்வாழ்வதற்காக மட்டுமே ரத்தம் குடிக்கின்றன. இந்த பட்டியலில் உள்ள 5 விலங்குகள் எவை என்று […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற தனது புதிய முயற்சிகள், அமெரிக்கா – டென்மார்க் மற்றும் பிற நாட்டு நாட்டு (NATO) கூட்டாளிகளுடன் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த நிலையில், இதுபற்றி ரஷ்யாவுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். புதன்கிழமை இரவு ரஷ்யாவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உரையில் பேசிய புடின், இந்த விவகாரத்திலிருந்து ரஷ்யா […]

தன்னை கொலை செய்ய முயன்றதாக ஈரான் பொறுப்பேற்றால், அந்த நாடு “முழுமையாக அழிக்கப்படும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தன்னை குறிவைத்து நடைபெறும் எந்தவொரு கொலை முயற்சிக்கும் இந்த உத்தரவு நேரடியாக பொருந்தும் என்று அவர் தெரிவித்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ட்ரம்ப், “எனக்கு மிகவும் உறுதியான உத்தரவு உள்ளது.. எதாவது நடந்தால், அவர்கள் இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்தே அழிக்கப்படுவார்கள்,” என்று கூறினார். […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ருத் சோஷியல்’ இல், ஐரோப்பிய தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில், அமெரிக்கக் கொடியின் வடிவில் கனடா, கிரீன்லாந்து மற்றும் வெனிசுலா ஆகியவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக காட்டப்பட்டிருந்தது. இந்தப் பதிவில், டிரம்ப் ஓவல் அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் காட்சியுடன், பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரிட்டன் பிரதமர் […]

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரான்ஸ் தனது “அமைதி வாரியம்” (Board of Peace) என்ற தனது புதிய அமைப்பில் சேர மறுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பிரான்ஸை கடுமையாக தாக்கியுள்ளார். இதன் ஒரு பகுதியாக, பிரான்ஸில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வைன் மற்றும் ஷாம்பேன் மீது 200 சதவீத சுங்கவரி (tariff) விதிக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார். அதே நேரத்தில், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் எம்யூயல் மக்ரோன் […]

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஒரு பழைய வணிக வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் 8 உடல்களை மீட்டெடுத்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு குல் பிளாசா என்ற மொத்த மற்றும் சில்லறை விற்பனை சந்தையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. அடித்தளம், இடைத்தளம் மற்றும் மேலும் மூன்று தளங்களில் […]

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து […]