#Breaking : அமைச்சர் நேருவின் தம்பி மீதான சிபிஐ வழக்கு ரத்து.. ஆனா ஒரு கண்டிஷன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

photo collage.png 8

அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அமைச்சர் கே.என். நேருவின் சகோதர் ட்ரூடோம் இ.பி.சி இந்தியா நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் ரூ.30 கோடி கடன் பெற்றது.. இந்த தொகையை தன் துணை நிறுவனங்களுக்கு திருப்பி விட்டதால், தங்களுக்கு சுமார் ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டதாக வங்கி தரப்பு புகார் அளித்திருந்தது.. இந்த புகாரின் அடிப்படையில் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் மீது 2021-ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது..


இதை தொடர்ந்து அமைச்சர் நேரு, அவரின் சகோதரர்கள், சகோதரி மட்டும் மகன் ஆகியோரின் வீடு, அலுவலகம் என 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது..

சிபிஐ வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.. ஆனால் இதற்கு மனுதாரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.. இதையடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீதான சிபிஐ வழக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் மோசடி எதுவும் நடைபெறவில்லை எனவும், அரசு அதிகாரிகள் யாரும் சம்மந்தப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தமிழ்நாடு சமரச தீர்வு மையத்திற்கு ரூ.15 செலுத்த நிபந்தனை விதித்து இந்த வழக்கை ரத்து செய்வதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Read More : தந்தை மீதான புகாரில் மகன்களை இழுத்துச் சென்ற போலீஸ்..!! – வீடியோ வெளியாகி பரபரப்பு

English Summary

The Madras High Court has quashed the CBI case against Minister Nehru’s younger brother Ravichandran.

RUPA

Next Post

பெண்களுக்கு மாரடைப்பு வருவதை முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. இதை எப்படி கண்டறிவது..?

Mon Jul 7 , 2025
உலகளவில், இருதய நோய்கள் (சி.வி.டி) தான், மரணத்திற்கு முதல் இடத்தில் உள்ளது. மேலும், இந்த இறப்பிற்கு பெரும்பாலும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் தான் காரணமாக இருக்கின்றன. இதயத்திற்கு செல்லக்கூடிய ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் ஆனது, ஏதேனும் அடைப்பு காரணமாக நிறுத்தப்படும் போது மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால் இந்த மாரடைப்பு நீண்ட காலமாக ஆண்களின் பிரச்சனையாகக் கருதப்படுகிறது. உண்மை என்னவென்றால், பெண்களின் மரணத்திற்கு மாரடைப்பு முக்கிய காரணமாகும். இன்னும் கவலைக்குரிய […]
heart attack 1 11zon

You May Like