மத்திய உள்துறையின் கீழ் இயங்கும் எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு விளையாட்டு வீரர்களுக்கே சிறப்பு கோட்டா வழியாக வழங்கப்படுகிறது. அதன்படி வில்வித்தை, தடகள விளையாட்டு, பேட்மிட்டன், பாக்ஸிங், சைக்கிளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம், யோகா, கராத்தே, நீச்சல், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் திறமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிட விவரம்: ஆண்களுக்கு 197 மற்றும் பெண்களுக்கு 194 என மொத்தம் 391 காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: எல்லை பாதுகாப்பு படை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆகஸ்ட் 1-ம் தேதியின்படி, விண்ணப்பிக்க 18 முதல் 23 வயது வரை இருக்க வேண்டும். மத்திய அரசு விதிமுறைகளின்படி, எஸ்சி, எஸ்டி, ஒபிசி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு உண்டு.
தகுதி:
* 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகரான கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.
* சர்வதேச, தேசிய அளவு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
* இப்பதவிக்கு விண்ணப்பிக்க ஆண்கள் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.
* பெண்கள் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும். எஸ்டி மற்றும் சில குறிப்பிட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கு தளர்வு உள்ளது.
* ஆண்களுக்கு மார்பக விரிவு 80 செ.மீ இருக்க வேண்டும். கண் பார்வை 6,/6 & 6.9 என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.
சம்பளம்: கான்ஸ்டபிள் பதவிக்கு நிலை 3-கீழ் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் மற்றும் செலவினங்கள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதார்களில் விளையாட்டு மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட தேர்வு முறைக்கு அழைக்கப்படுவாரக்ள். சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு https://rectt.bsf.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் அக்டோபர் 16-ம் தேதி தொடங்கி, நவம்பர் 4-ம் தேதி முடிவடைகிறது.