நாடே எதிர்பார்த்த 370-வது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட வழக்கு…! உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை…!

370-வது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவானது. இதை எதிர்த்து பல்வேறு அமைப்பு சார்பிலும், அரசியல் கட்சி சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

Vignesh

Next Post

கொட்டித் தீர்க்கும் கனமழை!... எச்சரிக்கை அளவைக் கடந்த யமுனை நதி நீர்மட்டம்!

Tue Jul 11 , 2023
தொடர் கனமழை பெய்துவருவதால் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் யமுனையில் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாயக் குறி 205.33 மீட்டராகவும் உள்ளது. இதற்கிடையில், கனமழை குறித்து […]

You May Like