அதிரடி…! பருப்பின் இருப்பை அரசுக்கு அறிவிக்க வேண்டும்…! இல்லை என்றால் கடும் நடவடிக்கை…!

மத்திய நுகர்வோர் விவகாரத்துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் நான்கு மாநிலங்களில் 10 இடங்களுக்குச் சென்று, துவரம் பருப்பு, உளுந்து ஆகிய பருப்புவகைகளின் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக நுகர்வோர் விவகாரத்துறையின் செயலர் , அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


கடந்த வாரம் அகில இந்திய பருப்பு ஆலைகள் சங்கத்தினருடன் செயலர் பேச்சு வார்த்தை நடத்தினார். 15-ம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு நடத்த அதிகாரிகளை துறை நியமித்தது.

images 2023 04 18T074736.353

அதன்படி, சென்னை, சேலம், மும்பை, அகோலா, லத்தூர், சோலாபூர், கலபுரக்கி, ஜபல்பூர், கத்னி ஆகிய பல்வேறு இடங்களுக்கு சென்று மாநில அரசின் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். ஆலை உரிமையாளர்கள், வணிகர்கள், இறக்குமதியாளர்கள், துறைமுக அதிகாரிகள் ஆகியோருடனும் இந்த ஆலோசனை நடைபெற்றது. பருப்பு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், அவற்றின் இருப்பை வெளியிடுவது அவசியமாகும் என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.

தங்களிடம் உள்ள இருப்பை மறைக்காமல் அறிவிக்க வேண்டும் என்றும் தவறுவோர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Vignesh

Next Post

ஆசிரியர் தகுதித் தேர்வு..!! அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

Tue Apr 18 , 2023
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்த நிலையில் இந்த ஆண்டும் அதனைப் போலவே அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதேசமயம் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்படும் என்றும் […]
Anbil 1

You May Like