பாலியல் தொழிலாளர்களுக்கு தனி சுகாதர மையம் : ஏன் தெரியுமா?

இந்தியாவில் பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு,  பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டெல்லி கார்ஸ்டின் பேஸ்டன் பகுதியில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்காக சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுகாதார மையம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.


பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டெல்லி நகரின் பிற பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களுக்கு செல்லும்போது, பல்வேறு சமூக அவலநிலையை எதிர்கொள்கின்றனர். பாலியல் தொழிலாளர்களிடம் மருத்துவர்கள் தவறான முறையில் அனுகுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சேவா பாரதி போன்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார மையங்கள் மூலம் அது போன்ற சமூக அவல நிலையில் இருந்து விடுபட முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்களுக்காக புது வருடத்தில் சேவா பாரதி அமைப்பு இந்த சுகாதார அமைப்பை தொடங்கி இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

KOKILA

Next Post

காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்து கொண்ட சோகம்..! 

Mon Jan 2 , 2023
புதுநகர் வைகை வீதியை சேர்ந்தவர் திருக்குமரன், தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் ராமகிருஷ்ண சாய் (பிறப்பு 1989). இவர் லாஸ்பேட்டையில் உள்ள சமுதாயக் கல்லூரியில் இளங்கலை 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த தன்னை விட 3 வயது மூத்த அஞ்சலி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதையறிந்த அஞ்சலியின் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். அஞ்சலியை பலமுறை சென்று பார்த்தாலும் ராமகிருஷ்ணசாய் […]
n4579124961672636985342635ef339724c50aebca5211dde6e82bb5ac0f9d1c3936e8a21961bf6ccc3b3f4

You May Like