Rain: வரும் 30 முதல் மே 2-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

வரும் 30, மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 29-ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 30.04.2024 மற்றும் 01.05.2024 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

வரும் 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அடுத்த ஐந்து தினங்களுக்கான தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3″-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42″ செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

ஒரே நாளில் ரூ.1,000 ரூ.20 லட்சமாக மாறிய வருமானம்!… கவனத்தை ஈர்த்த கோடக் வங்கி!

Sat Apr 27 , 2024
Kotak Bank: கோடக் மஹிந்திரா வங்கியின் 18 லாட்களை வெறும் ரூ.1000 என்ற குறைந்த விலை வாங்கியதால், வர்த்தகர் ஒருவர் 20 லட்சம் ரூபாய் வரை பெரும் லாபம் ஈட்டியது சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளது. பல இந்திய தொழில் அதிபர்கள் தங்களுக்கான பில்லியன் டாலர் மதிப்பிலான தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதித்து காட்டி உள்ளனர். ஒரு சிலர் இந்தியாவின் பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் கூட இடம் பிடித்துள்ளனர். […]

You May Like