சண்டிகரில் வீடியோ வெளியான வழக்கில் இருவர் கைது… ஷிம்ளாவை சேர்ந்த இளைஞர் அதிரடி கைது …

சண்டிகரில் கல்லூரி மாணவிகளின் ’ஆபாச வீடியோ’ வெளியான விவகாரத்தில் பஞ்சாப் போலீசார் இதுவரை இரண்டு பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதியில் மாணவி ஒருவர் சக மாணவிகள் குளிப்பதை  ஆபசமாக வீடியோ எடுத்து வெளியிட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவி அவருடைய ஆண் நண்பருக்கு வீடியோக்களை அனுப்பினார் என்பது தெரியவந்தது.


இதையடுத்து ஷிம்ளாவின் ரோஹ்ரு பகுதியைச் சேர்ந்த சன்னி மேத்தா (23) என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் கைதான பல்லைக்கழக மாணவியும் இதே பகுதியைச் சேர்ந்தவர். அந்த மாணவியின் ஆண் நண்பர் எனவும் கூறப்படுகின்றது. இவரிடம் முழு விசாரணை நடத்தப்பட்ட பின்னரே முழு விவரத்தையும் கூற முடியும் எனவும் இருவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்களை ஆய்வுக்குட்படுத்தப்பட உள்ளது. சோதனைக்குப் பின் எவ்வாறு வீடியோக்கள் வெளியானது என்பது தெரியவரும் என ஏ.டி.ஜி.பி. குப்ரீத் தியோ தெரிவித்துள்ளார்.

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் சக விடுதி மாணவிகளின் அந்தரங்கங்களை வீடியோ எடுத்து ஆபாசமாக வெளியிட்டுள்ளதார். இதையடுத்து மாணவிகள் விடுதியில் அமர்ந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கைவைத்தனர்.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட மாணவியை கைது செய்த காவல்துறையினர் அந்த பெண்ணின் செல்போனை சோதனை செய்தபோது அதில் ஒரே ஒரு வீடியோ மட்டும் இருந்ததாகவும் அது அவரது தனிப்பட்ட வீடியோ , அதை அவரது ஷிம்ளாவில் உள்ள ஆண் நண்பருக்கு அனுப்பி உள்ளார் என தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆர்.எஸ். பாவா கூறுகையில் ’’ கல்லூரியில் நடத்தப்பட்ட விசாரணையில் 60 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாகவும்,ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன. ஒரே ஒரு வீடியோ மட்டுமே கிடைத்துள்ளது. அதுவும் அந்த மாணவியின் தனிப்பட்ட வீடியோ அது அவரது ஆண் நண்பருக்கு அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பிற மாணவிகளின் வீடியோக்கள் எதுவும் இல்லை. ஆனால் 60 எம்.எம்.எஸ். கிடைத்துள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியிடுகின்றனர். ’’ என தெரிவித்தார்.

Next Post

வெயிலில் இருந்து தப்பிக்க என்னம்மா யோசிக்கராங்க… காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்திய இளைஞர் …

Sun Sep 18 , 2022
இந்தியாவில் வெப்பம் அதிகரித்து வருவதால் இளைஞர் ஒருவர் காருக்குள் வின்டோ ஏ.சி.யை பொருத்தியது பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகின்றது. வட இந்தியாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் தனது காரில் வீட்டுக்கு பொருத்தக்கூடிய வின்டோ ஏ.சி.யை பொருத்தி உள்ளார்.இந்த ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி வரை வெயில் வெளுத்து வாங்கியது. டாடா வெளியிட்ட புது வகையான பன்ச் காரில்தான் இந்த நபர் தனது புதிய கண்டுபிடிப்பை பொருத்தி வெற்றிகரமாக சோதனையும் […]
tata punch ac cooling blue star window 3 600x338 1

You May Like