விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விமான நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி கோவளம் கடற்கரையில் புதைக்கப்பட்டது சம்பந்தமாக விபச்சார தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் ஜெயந்தன் வயது 29 இவர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள என் ஜி ஓ காலனியிலிருக்கும் தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து சென்னை விமான நிலையத்தில் உள்ள வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி சொந்த ஊர் செல்லயிருப்பதாக சகோதரியிடம் கூறிவிட்டு கிளம்பி இருக்கிறார். அதன் பிறகு இவரிடமிருந்து எந்த தகவல்களும் இல்லை இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரி ஜெயந்தனின் செல்போன் இருக்கு தொடர்பு கொண்டு உள்ளார் அப்போது ஸ்விட்ச் ஆஃப் என வந்திருக்கிறது இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள தந்தைக்கு போன் செய்து கேட்டிருக்கிறார் அங்கும் ஜெயந்தன் வராததால் அதிர்ச்சியடைந்த அவர் சென்னை புலவந்தாங்கல் காவல் நிலையத்தில் சகோதரரை காணவில்லை என புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறை தீவிரமாக விசாரணையில் இறங்கியது.
அவரது செல் போன் நம்பரை வைத்து ஆய்வு செய்தபோது புதுக்கோட்டை மாவட்டம் செம்பாலம் பட்டி என்ற இடத்தில் இறுதியாக சிக்னல் காட்டி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை நடத்தியதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த பாக்கியலட்சுமி என்ற 38 வயது பெண்ணின் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்துள்ளது. அவரைப் பிடித்து விசாரித்ததில் ஜெயந்தனை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இது பற்றி வாக்குமூலம் அளித்துள்ள பாக்கியலட்சுமி “பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த அவர் தாம்பரம் லாட்ஜில் ஜெயந்தனை சந்தித்திருக்கிறார். அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 2020 ஆம் ஆண்டில் ஜெயந்தனும் பாக்கியலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்து விட்டனர். பின்னர் பாக்கியலட்சுமி தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வந்து தங்கி இருக்கிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி ஜெயந்தன் புதுக்கோட்டைக்கு வந்து தன்னுடன் மீண்டும் வாழ வருமாறு பாக்கியலட்சுமி வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமி அவரது ஆண் நண்பருடன் சேர்ந்து ஜெயந்தனை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து கோவளம் கடற்கரையில் புதைத்துள்ளனர். இந்தக் கொலைக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த சங்கர் மற்றும் கோவளத்தை சார்ந்த வேல்முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை பாக்கியலட்சுமி சங்கர் மற்றும் வேல்முருகன் ஆகியோரை கைது செய்துள்ளது. கோவளம் கடற்கரையில் ஜெயந்தனின் உடல் பாகங்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.