மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, இருவரும் முன்பு பேசி இருந்த வீடியோ காலை பதிவு செய்து வைத்திருந்த இவர், அந்தப் பெண்ணை மிரட்டத் துவங்கி உள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த நபரை கைது செய்தனர். […]

தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் இருக்கும் ஆந்திரா வங்கியில், 15 நிறுவனங்களின் பெயரில் பல கோடி ரூபாயை ஒருவர் கடனாக பெற்றுள்ளார். இரண்டு வருடங்களாக அவர் பணத்தை செலுத்தி வந்த நிலையில், தனது கடனை புதுப்பிக்க முயன்ற போது, அவர் சமர்ப்பித்திருந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி மோசடியில் ஈடுபட்ட 12 காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத் மாவட்டத்திலிருந்து சுமார் 63 கிலோ மீட்டர் […]

பூனே காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோது, ₹2,200 கோடி மதிப்பிலான 1,100 கிலோ எம்.டி. வகை போதை பொருளை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த செவ்வாய் அன்று பூனே மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக குர்கும்ப் எம்ஐடிசியில் அமைந்துள்ள தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். அப்போது 700 கிலோ அளவிலான […]

லக்னோவில் மதுபானம் வாங்க பணம் தர மறுத்த வயதான தந்தையை, மகன் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். அவரை கைது செய்த காவல்துறையினர், இது குறித்த விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. லக்னாவில் உள்ள இந்திரா நகரில் குஷி ராம் சைனி என்ற 70 வயது முதியவர், தனது மகனான ஹேமந்த் சைனியுடன் அவர்களது வீட்டின் தரை தளத்தில் வசித்து வந்தார். ஹேமந்த் […]

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய நபர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளை அனுப்பி தொந்தரவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் அதிகாரிகள், 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். புதுச்சேரியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அடையாளம் தெரியாத இரு நபர்களுடன் பழகி வந்துள்ளார். அவர்கள் அந்தப் பெண்ணுக்கு ஆபாச படங்களையும், குறுஞ்செய்திகளையும் அனுப்பி மிரட்டி உள்ளனர். கலக்கமடைந்த அந்தப் […]

தேனி அருகே, கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபரை ஒரு பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குற்றவாளிகள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே தேவதானப்பட்டியில் மன்மதன் என்பவர் ஜோதிடம் பார்ப்பது, மாட்டு தீவனம் விற்பனை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி, மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் […]

டெல்லியில் பிரபல யூடியூபர் ஏற்பாடு செய்த பார்ட்டியில், பாம்புகள் மற்றும் அதன் விஷத்தை விநியோகித்ததாக பரபரப்பு புகார் நொய்டா காவல்துறைக்கு கொடுக்கப்பட்டது. காவல்துறைக்கு கிடைத்த மாதிரிகளில், பாம்பின் விஷம் இருப்பதை, ஜெய்ப்பூரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளதை அடுத்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியைச் சேர்ந்த பிரபல யூடியூபர் எல்விஷ் யாதவ், தனது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை எடுப்பதற்காக பாம்புகளை பயன்படுத்தி வந்துள்ளார். டெல்லி […]

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர், காவல்துறையின் வாகனத்தை பயன்படுத்தி, இன்ஸ்டாகிராம் ரீல் (Instagram reel) எடுத்துள்ளார். காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்த நேரத்தை பயன்படுத்தி, அவர் அந்த ரீலை எடுத்தது தெரிய வந்தது. அந்த ரீல் வைரலான நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி, உத்தரபிரதேச மாநிலம் உள்ள காஜியாபாத்தில், மொயின் கான் என்ற இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் ரீல் எடுப்பதற்காக காவல்துறையின் […]

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் நன்பரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றிருக்கிறது . அந்தப் பகுதியைச் சேர்ந்த 1 வயது குழந்தையை 50 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். […]

கர்நாடக மாநிலத்தில் கணவர் கண் முன்னே மனைவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக பெண் கொடுத்த புகாரின் பேரில் 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கொப்பல் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 8ஆம் தேதி அந்தப் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் தனது கணவருடன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். […]