#Weather: வரும் 17-ம் தேதி வரை வறண்ட வானிலை…! 3 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்…!

தமிழகத்தில் வறண்ட வானிலைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.


நாளை முதல் வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 20 முதல் 21 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

முந்திரியில் உள்ள அற்புத பயன்கள்!... நைட் முழுக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

Tue Feb 14 , 2023
தினந்தோறும் இரவு முழுக்க பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மிகுந்த சுவை மிக்க முந்திரி பருப்பை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், முந்திரி பருப்பை பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். சிலர் தேனில் ஊறவைத்து உண்பார்கள். சிலர் முந்திரியை பச்சையாக சாப்பிடுவார்கள். […]
cashews

You May Like