முந்திரியில் உள்ள அற்புத பயன்கள்!… நைட் முழுக்க இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

தினந்தோறும் இரவு முழுக்க பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மிகுந்த சுவை மிக்க முந்திரி பருப்பை அனைவரும் விரும்பி உண்பார்கள். இதில் ஆன்டிஆக்ஸிடன்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் காணப்படுகிறது. இந்தநிலையில், முந்திரி பருப்பை பல வழிகளில் எடுத்து கொள்ளலாம். சிலர் தேனில் ஊறவைத்து உண்பார்கள். சிலர் முந்திரியை பச்சையாக சாப்பிடுவார்கள். வேறு சிலர் இரவில் ஊறவைத்து காலையில் உண்பார்கள். இதையெல்லாம் விட பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 100 கிராம் முந்திரி பருப்பை சாப்பிட்டால் கிட்டத்தட்ட 18.22 கிராம் புரதச்சத்து கிடைக்கும். முந்தரி பருப்பு மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களின் பண்புகளை கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பது மற்றுமின்றி இதய ஆரோக்கியம் மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில், கொழுப்பு அமில வகையைச் சேர்ந்த ஒலிக் அமிலத்தின் அளவும் அதிகமாக காணப்படுகிறது. இதய நோய்களை எதிர்த்துப் போராட வலிமை கிடைக்கும். முந்திரி பருப்பில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உண்பதால் எலும்புகள் ஆரோக்கியமாக மாறும். இதனை இரவில் ஊறவைத்து, மறுநாள் காலையில் உண்டால், நம் உடலுக்கு கால்சியம் சத்து மிகுதியாக கிடைக்கும். பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. முந்திரியில் வைட்டமின் கே, மெக்னீசியம், வைட்டமின் பி6, மெக்னீசியம் ஆகியவை காணப்படுகின்றன. இவை அனைத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் இது மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் காரணமாக உள்ளது. வைட்டமின்கள், தாமிரம், இரும்பு, துத்தநாகம் நிறைந்த முந்திரி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும். முந்திரியை பாலில் ஊற வைத்து சாப்பிட்டால் அதன் பலன்கள் இரண்டு மடங்காகும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கும். முந்திரி பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் அதிகமாக காணப்படுகின்றன. இவை உடலுக்குள் கிருமிகள் நுழைவதை தடுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Kokila

Next Post

பத்தாம் வகுப்பு முதல் டிகிரி வரை ஆவினில் வேலை வாய்ப்பு அறிவிப்பு!

Tue Feb 14 , 2023
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்கமான ஆவினில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகள் கடந்த எட்டாம் தேதி வெளியாக இருக்கின்றன இந்த அறிவிப்புகளின் படி ஆவின் பால் நிறுவனத்தில் 322 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேனேஜர் உதவி மேனேஜர் தொழிற்சாலை உதவியாளர் பொறியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 322 இடங்களுக்கான அறிவிப்பை கடந்த எட்டாம் தேதி தமிழ்நாடு பார் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமான ஆவின் வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு தகுதியான […]

You May Like