தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை…! வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்…!

தமிழகத்தில் 25-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று முதல் 25-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக் கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.


அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்க கூடும். சென்னையில் படிப்படியாக வெப்ப தாக்கம் அதிகரிக்கும் வரும் நாட்களில் 3 டிகிரி செல்சியசில் இருந்து 4 டிகிரி வரை அதிகரிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IMG 20230222 054652

Vignesh

Next Post

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு திட்டம்...! உண்மை என்ன...?

Wed Feb 22 , 2023
மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக பரவி வரும் செய்திக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதான் மந்திரி பெரோஜ்காரி பட்டா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்படுவதாக செய்தி ஒன்று வாட்ஸ் ஆப் போன்ற பிற சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன. மத்திய அரசு சார்பில் […]
"கூகுள் பே" மூலம் பணப்பரிமாற்றம் செய்பவர்களுக்கு எச்சரிக்கை..! இப்படியும் மோசடி செய்யலாம்..!

You May Like