கோடையில் குளிர்ச்சி….! இன்று தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை…! எல்லாம் உஷாரா இருங்க…!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மீனவர்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையும் இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

வீட்டுக் கடன் வாங்கப் போறீங்களா..? எஸ்பிஐ வங்கி வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்..!!

Fri Mar 31 , 2023
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில், அவ்வப்போது பல சலுகைகளையும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி தற்போது சூப்பர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. பணவீக்கத்தின் காரணமாக ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு அனைத்து விதமான லோன்களின் வட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. அதன்படி, வீட்டு கடனுக்கான […]

You May Like