#Rain: அடுத்த 3 நாட்கள் வானிலை இப்படி தான் இருக்கும்…! மீனவர்களுக்கு எச்சரிக்கை…!

தமிழகத்தில் 17-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல் 17-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 25 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


வரும் 17-ம் தேதி வரை மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

முதுமை பெறாமல் என்றும் இளமையாக இருக்க உதவும் பழங்கள்..! 

Thu Dec 15 , 2022
முதுமை பெறாமல் என்றும இளமையாக இருக்க வேண்டுமா? தோல் சுற்றுக்கங்கள் நீங்க வேண்டுமா? இந்த பதிவினில் அதற்கான சில டிப்ஸ் பார்க்கலாம். பழங்களின் பல சத்துக்கள் நிறைந்துள்ளன.  பொதுவாக ஆரஞ்சு பழத்தில் இருக்கும் வைட்டமின் சியானது சளித் தொல்லையையும், காய்ச்சலையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அத்துடன் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. இதனை பழமாகவோ அல்லது ஜூசாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதன் வரிசையில் அடுத்து வருவது வாழைப்பழம் தான். இது சருமத்தில் […]
n44801164816700439604387d1ac85e40cc078e659bd1babc9255967ea2bfeafd5d7b82ca83adaf13544f0d

You May Like