நடுரோட்டில் சேவல் சண்டை.. தட்டிக்கேட்ட போலிசாருக்கு அடி,உதை.!

சென்னை அருகே அயனாவரம் பகுதியில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து சென்று அங்கே பார்த்தபோது இறந்தவரின் உறவினர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியவாறு சேவல் சண்டை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.


இதனை தொடர்ந்து காவலர் திருநாவுக்கரசு அதை வீடியோ எடுத்த போது சேவல் சண்டையை நடத்தியவர்கள் திருநாவுக்கரசை தாக்கி இருக்கின்றனர். அதை தடுக்க முயன்ற பெண் உதவி ஆய்வாளர் மீனா என்பவருக்கும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சஞ்சயன், குணசேகரன் என்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி சேவல் சண்டை நடத்தியவர்களை தட்டி கேட்ட காவலர்களுக்கு தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

ஓடும் பேருந்தில் இருந்து ஜன்னல் வழியே குதித்த பெண்..!! காமக்கொடூரர்களால் அரங்கேறிய சம்பவம்..!!

Fri Jan 27 , 2023
பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றி கொள்ள 30 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமை அதிகாலை பேருந்தில் சென்ற பெண்ணை சில நபர்கள் துன்புறுத்த வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் மீண்டும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. காயமடைந்த நேபாள […]
Rape e1667877828212

You May Like