சென்னை அருகே அயனாவரம் பகுதியில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்த போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து சென்று அங்கே பார்த்தபோது இறந்தவரின் உறவினர்கள் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியவாறு சேவல் சண்டை நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து காவலர் திருநாவுக்கரசு அதை வீடியோ எடுத்த போது சேவல் சண்டையை நடத்தியவர்கள் திருநாவுக்கரசை தாக்கி இருக்கின்றனர். அதை தடுக்க முயன்ற பெண் உதவி ஆய்வாளர் மீனா என்பவருக்கும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
இது பற்றி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சஞ்சயன், குணசேகரன் என்ற இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி சேவல் சண்டை நடத்தியவர்களை தட்டி கேட்ட காவலர்களுக்கு தாக்குதல் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.