Bar Accident: சென்னை மதுபான விடுதி மரணம்…! உரிமையாளர் ஜாமினில் விடுவிப்பு…!

மதுபான விடுதி உரிமையாளர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் உள்ள மதுபான கேளிக்கை விடுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் தளத்தில் உள்ள அறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சைதாப்பேட்டை, எழும்பூர், அசோக்நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 3 வாகனங்களில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் துரதிர்ஷ்டவசமாக மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (22 வயது), லில்லி (24 வயது) மற்றும் தமிழகத்தை சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48 வயது) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பார் உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக் குமார் நேற்று சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இந்த சம்பவத்தில் ஏற்கனவே மேலாளர் சதீஷ் கைது செய்யப்பட்ட நிலையில், உரிமையாளரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் மதுபான விடுதியில் மேற்கூரை இடிந்து 3 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அபிராமபுரம் காவல்நிலையத்தில் சரணடைந்த மதுபான விடுதி உரிமையாளர் அசோக்குமார் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு எழுத்து பூர்வ விளக்கங்களை பெற்ற பின் காவல்நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

Vignesh

Next Post

சிக்கிய திமுக..! கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதியின் துரோகம்...! நாளை Part 2 வெளியாகும்...!

Sun Mar 31 , 2024
கலைஞர் கருணாநிதி கச்சத்தீவு விவகாரத்தில் செய்த துரோகம் குறித்து பேச உள்ளதாக அண்ணாமலை கூறினார். கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை; இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடல் பகுதியில் உள்ள சிறிய தீவு தான் கச்சத்தீவு. சுமார் 285 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த தீவு ராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தூரத்திலும், இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து 10.5 மைல் தொலைவிலும் இருக்கிறது.கடந்த […]

You May Like