நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம்.. முதல்வர் ஸ்டாலின் முழு நேரமாக நடிக்க செல்லலாம்.. அண்ணாமலை விமர்சனம்..

67bc6feae8ae1 annamalai slams dmks language policy hypocrisy 241101450 16x9 1

நாளொரு வேஷம், பொழுதொரு நாடகம் நடத்தும் முதல்வர் ஸ்டாலின் முழு நேரமாக நடிக்க செல்லலாம் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளி அருகே, மது அருந்திய கும்பலைத் தட்டிக்கேட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் திரு. குலாம் தஸ்தகீர் அவர்கள் மீது, போதைக் கும்பல், பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மது விற்பனையில் பணம் வந்தால் போதும் என்ற திமுக அரசின் கட்டுப்பாடற்ற மது விற்பனையின் விளைவு, அரசுப் பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்குச் சென்றிருக்கிறது.


அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என திமுக ஆட்சியின் கையாலாகாத்தனத்தால், யாருக்குமே பாதுகாப்பில்லை. அரசுப் பள்ளியின் உள்ளே நுழைந்து, ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி தாக்குதல் நடத்த முடிகிறது என்றால், திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது என்பதுதான் பொருள். ஆனால், இது எவை குறித்தும் கவலை இல்லாமல், நாளொரு வேஷமும், பொழுதொரு நாடகமும் நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முழு நேரமாக நடிக்கச் செல்லலாம்.

ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும். உடனடியாக, அந்த சமூக விரோதிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பொது இடங்களில் மது அருந்தப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு ஊரிலும் காவல்துறை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : திமுக-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா..? அதிமுக நிர்வாகி படுகொலைக்கு EPS கண்டனம்..!!

RUPA

Next Post

ஜூலை 1 முதல் புதிய விதிகள் அமல்.. IRCTC தட்கல் முன்பதிவு முதல் வருமான வரி தாக்கல் வரை பல முக்கிய மாற்றங்கள்..

Thu Jun 26 , 2025
ஜூலை 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதுகுறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம். அந்த வகையில் ஜூலை 1 முதல் என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன என்பது குறித்து பார்க்கலாம். தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஐ.ஆர்.சி.டி.சி வழியாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல், ஆதார் அடிப்படையிலான OTP சரிபார்ப்பும் தேவைப்படும், இது அடையாள சரிபார்ப்புகளை […]
New Rules 1 August

You May Like