சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, திமுகவில் அமைப்புகளை முழுமையாக மறுசீரமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப்பெட்டி மூலமாக உட்கட்சித் தேர்தலை நடத்த கட்சித் தலைமை திட்டமிட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அடைந்த பின்னடைவை அடுத்து, கட்சியின் கிளை முதல் தலைமை நிர்வாகம் வரை உள்ள அனைத்துக் கட்டமைப்புகளையும் சீரமைப்பதற்காக 10 பேர் கொண்ட சிறப்புக் குழுவை திமுக தலைவர் ஸ்டாலின் அமைத்திருந்தார். இக்குழுவினர் கட்சி […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை மோதலால் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ‘அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு’வை தொடங்கி, மீண்டும் அதிமுகவில் இணைய ஓபிஎஸ் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து வந்த போதிலும், எடப்பாடி பழனிசாமி அதற்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைக்க முன்வந்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே […]

சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மீது தேர்தல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவரது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளை மற்றும் சொத்து விபரங்களை மறைத்ததாக வழக்கறிஞர் திருஞானசம்பந்தன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் விதிகள் படி, வேட்பாளர்கள் தங்களின் சொத்துக்கள், பொறுப்புகள் மற்றும் அறக்கட்டளை தொடர்புகளை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும். ஆனால், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், திமுக அறக்கட்டளை பற்றிய தகவல்களை வேட்புமனுவில் […]

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. “வேறு வழக்கில் கைது செய்யப்பட மாட்டேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே நேரில் ஆஜராக முடியும்” என போலீசாருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனை ஜாமீன் விதிகளின்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் தினமும் காலை, […]

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கூறினார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவெக-விற்கு வாக்களித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை […]

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும். திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில்மு.க. ஸ்டாலினை சட்டப்பேரவைக்கு கொண்டு வர திருவாரூர் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன் பிறகு வரும் இடைத்தேர்தலில் மு,க. ஸ்டாலின் திருவாரூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக […]

திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக  GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.. அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி […]

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன.. ஆனால் தேர்தல் முடிவுகளுக்கு பின் முதல் ஆளாக காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெகவுக்கு ஆதரவு வழங்கியது.. மேலும் அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி நாடாளுமன்ற தேர்தலிலும் தவெக உடன் கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்தது.. இதையடுத்து விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய […]

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. இந்த சூழலில் நேற்று கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் கடந்த 24 மணி நேரத்தில் 12 […]