’செல்போன் பயன்படுத்துவதை நம்மிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்’…! வெற்றிமாறன்

குழந்தைகளிடம் புத்தக வாசிப்பு அதிகரிக்கப் பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் வெற்றிமாறன் கூறினர்.

பாரதி புத்தகாலயம் சார்பில் சிறுவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ‘அரும்பு’ புத்தக விற்பனையகத்தை சென்னை தேனாம்பேட்டையில் இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் முன்னாள் மேற்குவங்க ஆளுநரும் காந்தியடிகள் பேரனுமான கோபால கிருஷ்ண காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது பேசிய வெற்றிமாறன், ‘வாழ்வில் வாசிப்பு என்பது இன்றியமையாத குணம், டிஜிட்டல்மயனான பிறகு அறிவுக்காகப் புத்தகத்தைச் சார்ந்திருப்பது குறைந்துவிட்டது. நாம் புத்தகங்கள் மூலம் மட்டும் வாசித்தபோது குறைவாகப் படித்தாலும், ஆழமாகத் தெரிந்து கொண்டோம்.

’செல்போன் பயன்படுத்துவதை நம்மிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர்’...! வெற்றிமாறன்

இன்று நமக்கெல்லாம் நினைவாற்றல் குறைந்து விட்டது, என்னுடைய படம் வெளிவந்த ஆண்டு குறித்துக் கூட எனக்கு நினைவு இல்லாமல் போய்விட்டது. இணையத்தில் சென்று பார்த்துத்தான் தெரிந்து கொள்ளும் சூழல் இருக்கிறது. வாசிப்புத் தன்மை குறைவதால் அறிவு குறைந்து விடுகிறது. 10 ஆண்டு முன்பு படித்த அளவு இப்போது படிக்க முடியவில்லை. எனது மகனுக்கு 7 வயது, அவன் சாப்பிடும்போது தவறாமல் அலைபேசியில் கேம், படம் பார்க்கிறான். அலைபேசி பயன்படுத்துவதை நம்மிடமிருந்துதான் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். குழந்தைகளிடம் வாசிப்பதற்கான பொறுமை இன்று இல்லை. எனவே, டிஜிட்டல் முறையில் புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும். குழந்தைகளின் அறையில் அமர்ந்து பெரியவர்கள் புத்தகம் படிக்க வேண்டும். குழந்தைகள் புத்தகம் வாசிக்கப் பெரியவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதோடு வீட்டில் நுழையும்போது செருப்பைக் கழற்றிவிடுவது போல், ஏதோவொரு இடத்தில் அலைபேசியை வைத்து விட வேண்டும்’. இவ்வாறு அவர் பேசினார்.

Chella

Next Post

விவரிக்க வார்த்தைகளே இல்லை ..நன்றி , நன்றி நன்றி... வந்தியத்தேவன் கார்த்தி வெளியிட்ட அறிக்கை

Sun Oct 2 , 2022
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.    மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 […]

You May Like