இந்தியாவை உளவு பார்க்கும் சீனா

கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கடந்த நவம்பர் மாதம் சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் நிலை நிறுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்தது. இதையடுத்து சர்வதேச ஆய்வுக்கப்பல்கள் தங்களது துறைமுகங்களில் நிறுத்த இலங்கை அரசு ஒரு ஆண்டு தடை விதித்து உத்தரவிட்டதுடன், சீன கப்பலை திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கை அரசுக்கு சீனா கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்நிலையில், இனி அனைத்து ஆய்வுக்கப்பல்களையும் தங்களது துறைமுகங்களில் நிறுத்த அனுமதிக்க போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. கடலில் ஆய்வு செய்வதாகக்கூறி சீன ஆய்வுக்கப்பல்களுக்கு இலங்கை மீண்டும் அனுமதி அளித்துள்ளதால், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

Baskar

Next Post

ஏப்.19ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை..!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!!

Thu Mar 21 , 2024
மக்களவை தேர்தல் அன்று ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையை அளிக்க வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் தேர்வில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. நாடு முழுவதும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இந்திய […]

You May Like