fbpx

4 வயது அதிகம்..!! சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ’பசங்க’ பட நடிகர்..!! அடுத்த வருடம் டும் டும் டும்..!!

’பசங்க’ பட நடிகர் கிஷோர் தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’பசங்க’. தேசிய விருது பெற்ற இந்த படத்தில் இளம் சிறுவர்களாக கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதன்பிறகு இதே சிறுவர்கள் கோலிசோடா, கோலி சோடா-2 ஆகிய படங்களில் நடித்தனர். இதில் பசங்க கிஷோர் வஜ்ரம், நெடுஞ்சாலை, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

4 வயது அதிகம்..!! சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ’பசங்க’ பட நடிகர்..!! அடுத்த வருடம் டும் டும் டும்..!!

இந்நிலையில், தற்போது சீரியல் நடிகையான பிரீத்தி குமாருடன் காதலில் விழுந்துள்ள கிஷோர் சமீபத்தில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தங்களது காதல் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும், அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறும்போது, “அடுத்த வருடம் நாம் நம்முடைய பிறந்த நாள் மற்றும் அனைத்து விசேஷங்களையும் கணவன் மனைவியாக இணைந்து கொண்டாடுவோம்” என்று குறிப்பிட்டு அடுத்த வருடத்திற்குள் தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதையும் தெரிவித்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் பிரீத்தி குமார். அதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

4 வயது அதிகம்..!! சீரியல் நடிகையை கரம்பிடிக்கும் ’பசங்க’ பட நடிகர்..!! அடுத்த வருடம் டும் டும் டும்..!!

கிஷோர் தன்னை விட 4 வயது மூத்தவரான ப்ரீத்தியை காதலித்து கரம்பிடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புது ஜோடிக்கு ரசிகர்கள் சமூக வலைதளம் மூலம் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Chella

Next Post

இந்தியாவுக்கு அடி மேல் அடி..!! இருமல் மருந்தை குடித்ததால் மீண்டும் 18 குழந்தைகள் பலி..!!

Thu Dec 29 , 2022
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெஸ்கிதான் (Uzbekistan) அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் (Marion Biotech) என்ற நிறுவனம் தயாரித்த இருமல் மருந்ததான டாக்-1 மேக்ஸ் என்ற சிரப்பை குடித்ததால் 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தில், எத்திலின் கிளைகோல் […]
இந்தியாவுக்கு அடி மேல் அடி..!! இருமல் மருந்தை குடித்ததால் மீண்டும் 18 குழந்தைகள் பலி..!!

You May Like