பாலிவுட்டின் பிரபலமான நடிகை ஒருவருக்கு அடிக்கடி வலிப்பு வருவது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இதற்காக அவர் சிகிச்சை பெறுகின்றார் என்பது தெரியவந்துள்ளது.
தங்கல் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபாத்திமா சனா. இவருக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். தங்கல் படத்தில் கீதா போகத் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே இப்படி ஒரு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவலில் குடும்பத்தினர், நண்பர்களால் உறுதுணையுடன் வலிமையாக இருக்க முடிகின்றது என்று ஃபாத்திமா சனா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சமந்தா, தான் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறிவந்தனர். இந்நிலையில் பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
ஏதாவது ஒரு காரணத்தால் மூளையில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் அபரிமிதமன ஆற்றல் உற்பத்தியாக ஒரு மின் புயல் போல் கிளம்புகின்றது. அது நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்கு கடத்தப்படுகின்றது. அப்போது உறுப்புகளின் இயக்கம் மாறுபட்டு கை, கால்கள் உதறத் தொடங்குவதை நாம் வலிப்பு என்கின்றோம்…
வலிப்பை குறைக்கவும் மீண்டும் வராமல் தடுக்கவும் நிறைய மாத்திரைகள் உள்ளன. வலிப்பின் வகை, பாதிக்கப்பட்டவரின் வயதைப் பொருத்து மருந்து வழங்கப்படுகின்றது. 60 முதல் 70 சதவீதம் பேரை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என கூறுகின்றனர் மருத்துவர்கள்.