பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வித்யா பாலன். இவர் தமிழில் குரு, நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதையடுத்து, பாலிவுட்டில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். குறிப்பாக கடந்த 2011இல் டர்ட்டி பிக்சர் என்கிற படத்தில் கவர்ச்சி நடிகையாக நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். இப்படம் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. நடிகை வித்யா பாலனுக்கு கடந்த 2012ஆம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. தொழிலதிபர் ஒருவரை மணந்த வித்யா, திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2023/03/WhatsApp-Image-2023-03-08-at-8.51.29-AM.jpeg)
தற்போது 44 வயதாகும் வித்யாபாலன், நிர்வணமாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். உடலில் ஆடை எதுவும் அணியாமல் பேப்பரால் மட்டும் உடலை மறைத்தபடி போட்டோஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. 44 வயதில் இப்படி ஒரு போட்டோஷூட்டா? என நெட்டிசன்கள் ஷாக் ஆகிப் போய் உள்ளனர். வித்யா பாலனை இவ்வாறு போட்டோஷூட் நடத்தியது, டப்பூ ரட்னானி என்கிற புகைப்படக் கலைஞர் தான். இவர் இதற்கு முன் பாலிவுட் நடிகைகள் கியாரா அத்வானி, பரினிதி சோப்ரா, சன்னி லியோன் ஆகியோரையும் இவ்வாறு நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி உள்ளார்.