தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருந்து, ஹீரோவாக அறிமுகமானவர் தான் விமல். இவர், பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான ‘பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் பல விருதுகளை வாங்கியது. தொடர்ந்து பல படங்களிலும் தன்னுடைய நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார் விமல். இந்நிலையில், சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் நடிகர் விமல் குறித்துப் பேசுகையில், “தினமும் காலை காரை எடுத்துக்கொண்டு வெளியே வரும் விமல், தன்னிடம் கதை கூற வரும் இயக்குநர்களை காரில் அழைத்துக் கொண்டு குடிக்க சென்றுவிடுவாராம்.
பிறகு மீண்டும் அவரை ஒரு இடத்தில் இறக்கிவிடும்போது கையில் 2,000 ரூபாயை கொடுத்து இன்னொரு நாள் கதை கூற வாங்க என்று சொல்லிவிட்டு விமல் சென்றுவிடுவாராம். இவ்வாறு விமல் குடிக்கு அடிமையானதால் தான் அவரை ஃபாலோ செய்வதை பலரும் நிறுத்திவிட்டார்களாம். அதுமட்டுமின்றி, நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டேன் என விமல் சொன்னதிலும் ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது கையெழுத்து போட்ட பல சமயங்கள் அவர் நிதானத்திலேயே இருந்ததில்லையாம்”.
இந்நிலையில், நடிகர் விமல் ‘துடிக்கும் கரங்கள்’ என்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது “நான் குடித்து 45 நாட்களுக்கு மேலாகிறது. ஆனால், நான் மது அருந்திவிட்டு தினமும் ஒவ்வொரு இயக்குநராக கூட்டிச்சென்று 2,000 கொடுத்து அனுப்புவதாக சில யூடியூப் பத்திரிகையாளர் அவதூறு பரப்புகிறார்கள்” எனக் கூறியுள்ளார். மேலும் வாய்க்கு வந்தபடி தன்னைப் பற்றி தவறாக யூடியூப்பில் எழுதிவிடுவதாகவும் ஒரு எக்ஸாம் அவர்களுக்கு வைக்க வேண்டுமென அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன்” எனவும் கூறியுள்ளார் நடிகர் விமல்.