fbpx

கன்னடத்தில் சக்கைபோடு போடும் காந்தாரா…. ! விரைவில் தமிழிலும்! ….

கன்னட திரையுலகில் அட்டகாசமான படம் என பேசப்பட்டு வரும் காந்தாரா விரைவில் தமிழ் மொழியிலும் வெளியாக உள்ளது.

கே.ஜி.எப்., கே.ஜி.எப். 2 உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் தான் இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. கடந்த 30 ம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்பட்டது. கன்னடத்தில் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது . இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். கிஷோர், அச்யூத்குமார் , பிரமோத் ஷெட்டி , ஷாலினி குரு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 14ல் இந்தியிலும் தெலுங்கில் அக்டோபர் 15ம் தேதியும்..வெளியாக உள்ளது.

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இப்படத்தை டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த நிலையில் வரும் 15ம் தேதி வெளியாக உள்ளதாக கூறியுள்ளனர். அதிக வசூலை ஈட்டியதுடன் விமர்சனத்திலும் அள்ளிக்குவித்து வருகின்றது. எனவே இப்படத்தைக் காண அனைவரும் அனைத்து மொழியினரும் காத்துள்ளனர்.

எதிர்பாராத அளவிற்கு வெற்றியை தந்துள்ளது இப்படம் என்றுதான் கூற வேண்டும். கருத்துக்கள் , விமர்சனங்கள் சிறந்ததாக இருப்பதால் அனைத்துமொழிகளிலும் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளது .  சமீபத்தில் காந்தாரா திரைப்படத்தின் ட்ரெயிலர் தமிழில் வெளியானதால் படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்..

Next Post

கிளாமரில் முன்னணி நடிகைகளை மிஞ்சிய அனிகா..!! புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!!

Thu Oct 13 , 2022
முன்னணி ஹீரோயின்களை மிஞ்சிய கிளாமரில் செம போட்டோஷூட் நடத்தியுள்ளார் நடிகை அனிகா. நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ’என்னை அறிந்தால்’. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனிகா. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, ஜெயம் ரவியுடன் மிருதன், குயின் வெப் சீரிஸ், மீண்டும் அஜித்துக்கு மகளாக விஸ்வாசம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். […]

You May Like