fbpx

திடீரென சீரியல் நடிகை காயத்ரிக்கு குவியும் வாழ்த்துகள்..!! இதுதான் காரணமா..?

‘மானாட மயிலாட’ என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் காயத்ரி. இந்நிகழ்ச்சியின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்த இவர், பின்னர் மெல்ல மெல்ல சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் என்னும் சீரியலில் நிலா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர், பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயது மகன் ஒருவனும் உள்ளார். அவ்வப்போது காயத்ரி தன்னுடைய மகனுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.

திடீரென சீரியல் நடிகை காயத்ரிக்கு குவியும் வாழ்த்துகள்..!! இதுதான் காரணமா..?

இந்நிலையில், தற்போது இரண்டாவது குழந்தையை விரைவில் பெற்றெடுக்க போகும் தகவலை வெளியிட்டுள்ளார். காயத்ரி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக, தன்னுடைய கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

Chella

Next Post

’தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது’..!! துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தடாலடி அறிவிப்பு..!!

Sat Jul 1 , 2023
கர்நாடகாவில் பருவமழை பற்றாக்குறையால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. இதற்கு 2018ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு அரசு பிரதமர் மோடிக்கு கடிதம் […]
’தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது’..!! துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தடாலடி அறிவிப்பு..!!

You May Like