fbpx

தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கை குழு..!!

தனுஷ் நடிப்பில் வெளியாகவுள்ள ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்படவுள்ளது.

தனுஷ் நடித்துவரும் ‘நானே வருவேன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். மேலும், அவரது சகோதரரும் திரைப்பட இயக்குநருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகை எல்லி அவ்ராமும் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார. ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தனுஷின் ’நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது தணிக்கைக் குழு..!!

இந்நிலையில் 2. 15 மணி நேரம் ஓடக்கூடிய ‘நானே வருவேன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் தணிக்கைக் குழு வழங்கியுள்ளது. இதற்கு முன்பு துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் தனுஷ் – செல்வராகவன் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ’நானே வருவேன்’ படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறச் செய்துள்ளது.

Chella

Next Post

இந்தியாவில் சாக விரும்பும் தலாய்லாமா …. சீனாவை விட இந்தியாவே மேல்…

Thu Sep 22 , 2022
திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா.. செயற்கையான சீனாவைக் காட்டிலும் சுதந்திரமான ஜனநாயக நாடான இந்தியாவில் எனது இறுதிமூச்சு இருக்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளார். இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு திபெத்திய ஆன்மீகத் தலைவரான தலாய்லாமா வந்திருந்தார். அமெரிக்காவின் அமைதி என்ற கல்வி நிறுவனம் (யு.எஸ்.ஐ.பி.) கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பங்கேற்ற அவர் கூறுகையில், ’’ இந்தியா சுதந்திரமான ஜனநாயக நாடு. அதில் அன்பான மக்கள் சூழ்ந்துள்ளனர். செயற்கைத்தன்மை […]

You May Like