சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக வலம் வந்த நடிகர் தான் பப்லு ப்ருத்விராஜ். இவர் கடைசியாக கண்ணான கண்ணே என்ற சன் டிவி தொடரில் நடித்து முடித்திருந்தார். தொடர் முடியும் நேரத்தில் பப்லு மறுமணம் செய்துகொண்டதால், அது சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால், அவர் அதைப்பற்றி கவலைப்படாமல் தனது புது வாழ்க்கையில் ஜாலியாக இருந்த வந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் எனது முதல் மனைவியும் நண்பர்களாக தான் இருந்தோம், ஆனால் கணவன்-மனைவியாக மாறிய பிறகு தான் பிரச்சனை தொடங்கியது. சாப்பிட்டியா என்று கூட கேட்டது இல்லை. சாப்பிட்டாச்சா என்று கேட்டால் என்னவென்று கேட்டால் கூட பசித்தால் நீங்களே சாப்பிட போறீங்க. இதுல என்ன கேட்கிறதுக்கு இருக்கு என்று சொல்லுவார்.
ஒரு நிகழ்ச்சியில் நானும் அவரும் கலந்துகொண்ட போது தொகுப்பாளர், உங்கள் கணவர் அழகாக இருக்கிறார். அவரை ஹக் பண்ணுவதற்கு நீங்கள் சந்தோஷப்படுகிறீர்களா? என்று கேட்டதற்கு, யார் இவனா? என்று கேட்டார், அது தன்னை மிகவும் காயப்படுத்திவிட்டதாகவும் அவமானம் செய்தது போல இருந்தது என பப்லு கூறியிருக்கிறார். அதுவே முதல் மனைவியை விவாகரத்து செய்ததற்கு காரணமாக இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.