fbpx

நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா..? விஜய் டிவி சீரியலில் தான் நடிக்கிறார்..!! யார் தெரியுமா?

பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கரின் மகன் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கப்பட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். 1965ஆம் ஆண்டு ’இரவும் பகலும்’ என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த அதே கால கட்டத்தில் நடித்தாலும், இவருக்கென ரசிகர்கள் இருந்தார்கள். இவரது சமகால நடிகர்களான முத்துராமன், ரவிச்சந்திரன் போன்றோருடனும் இவர் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் ஜெய்சங்கரின் மகனை பார்த்துள்ளீர்களா..? விஜய் டிவி சீரியலில் தான் நடிக்கிறார்..!! யார் தெரியுமா?

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிறகு, ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளையில் வில்லனாகப் புதிய பரிமாணத்தில் தோன்றி பாராட்டுகளைப் பெற்றார். அதன்பிறகு, பல படங்களிலும் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பரிமளித்தார். சினிமாவை தாண்டி இவர் பல சமூக நலதிட்ட உதவிகளை செய்துள்ளார். இவர், 2000ஆம் ஆண்டு மாரடைப்பால் காலமானார். இவருக்கு சஞ்சய், விஜய் என இரண்டு மகன்கள் உள்ளனர். விஜய் ஷங்கர் என்பவர் கண் மருத்துவராக உள்ளார். அவர் தன்னால் முயன்ற மருத்துவ உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். தற்போது சஞ்சய் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். விஜய் ட்வியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் தான் நடித்து வருகிறார்.

Chella

Next Post

தினமும் ரூ.30,000 வரை வருமானம்..!! ஆனால், ரோடுதான் இவரோட வீடு..!! சுவாரஸ்ய தகவல்

Wed Dec 7 , 2022
மனிதர்கள் மது, போதை போன்ற பழக்கத்திற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டார்கள் என்பது அறிந்த ஒன்றுதான். ஆனால், லண்டனைச் சேர்ந்த இந்த நபர் தன்னுடைய போதை பழக்கத்தை தொடர, தனது சொந்த வீட்டை வாடகைக்கு விட்டு தெருக்களிலும், ரயில் நிலையங்களிலும் தங்கி வருகிறார். டோம் (Dom) என்ற அந்த நபர் தனது வீட்டை வாடகை விட்டதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து போதை பொருள் வாங்கி வருகிறார். இதுகுறித்து […]
தினமும் ரூ.30,000 வரை வருமானம்..!! ஆனால், ரோடுதான் இவரோட வீடு..!! சுவாரஸ்ய தகவல்

You May Like