தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண். இவர், ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், நியூ, வின்னர் போன்ற படங்களிலும் நடித்தார். கோலிவுட்டின் கனவு நாயகியாக கிரண் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், பட வாய்ப்புகள் திடீரென குறைந்ததால், சினிமாவை விட்டு விலகினார். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருமலை படத்தில் விஜய்யுடன் ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார்.
அதன் பிறகு விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடித்திருப்பார். கார்த்தி நடித்த சகுனி படத்திலும் ஒரு துணை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து பட வாய்ப்புக்கள் இல்லாததால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். கிரண் தற்போது தெலுங்கு பிக்பாஸில் கலந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், சமீபத்தில் கிரண் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், ”நான் ஒருவரை காதலித்தேன். ஆனால், தான் காதலித்தது ஒரு வடிகட்டிய முட்டாள். அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டேன். அதுதான் என் வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் பெண்கள் பொதுவாக காதலில் விழுந்து எல்லாவற்றையும் இழந்து வீக் ஆகிவிடுகின்றனர். காதல் செய்வது தவறில்லை. நான் ஒரு முட்டாள். அந்த நேரத்தில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். அதனால் தான் என் வாழ்க்கையில் பலவற்றை இழக்க நேரிட்டது” என்று கூறியிருக்கிறார்.