பழம்பெறும் நடிகர் முத்துராமன் என்பவரின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்திக். இயக்குனர் பாரதிராஜா 1981ஆம் ஆண்டு இயக்கிய ’அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கார்த்திக். அதன்பிறகு தொடர்ந்து நல்ல நல்ல திரைக்கதை உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்துவந்த கார்த்திக், நவரச நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றார். தொடர்ந்து வெற்றி நாயகனாக வந்த இவர், இடையில் அரசியலில் ஈடுபட தொடங்கினார். பிறகு, சினிமா பயணம் அப்படியே குறைந்தது.

தற்போது அவரது மகன் கௌதம் கார்த்திக் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி படங்கள் நடித்து வருகிறார். நடிகர் கார்த்தி 1988ஆம் ஆண்டு சோலை குயில் என்ற படத்தில் தன்னுடன் நடித்த ராகினி என்பவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1992ஆம் ஆண்டு அவரது தங்கை ரதியை கார்த்திக் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், நடிகர் கார்த்திக்கின் மூத்த மகன் கௌதம் கார்த்திகை நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால், கார்த்திக்கின் இரண்டாவது மகன் யாருன்றோ அல்லது அவருடைய புகைப்படத்தையோ பலரும் பார்த்திருக்க முடியாது. இதோ உங்களுக்காக அந்த புகைப்படம்…
