நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்திலும், இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். ஏற்கனவே, ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் , நடிகை ஆத்மிகா, தமன்னா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிது வருகிறது.
படத்தின் ஷூட்டிங் சென்னை, மங்களூருவில் நடந்து வரும் நிலையில், 100 நாள் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜெயில் கதைக்களம் என்பதால் ஓய்வுபெற்ற ஜெயிலராக, முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். தற்போது வரை 70 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெறும் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் மங்களூருவில் ரஜினி – சிவராஜ்குமார் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்திலும், இசை வெளியீட்டு விழா ஜூலையில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.