லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது லியோ படக்குழுவினர் சென்னை பிரசாந்த் ஸ்டூடியோவில் செட் போட்டு நடத்தி வருகின்றனர். இதை தெரிந்து கொண்ட விஜய்யின் ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக எப்போதும் அந்த இடத்தையே சுற்றி வருகின்றனர். இதனால் படப்பிடிப்பை சரியாக செய்ய முடியாமல் படக்குழுவினர் திணறி வருகின்றனர்.
ஆனால், விஜய் ஏற்கனவே லோகேஷ் கனகராஜிடம் காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்த பின்னர் இதன் பின் அடுத்த எல்லா ஷூட்டிங் சென்னையில் வைத்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். ஆனால், விஜய் ரசிகர்களின் செயலால் கோபமடைந்த லோகேஷ், விஜயிடம் எப்படியோ பேசி படப்பிடிப்பை ஹைதராபாத்தில் வைத்துக்கொள்ள சம்மதம் வாங்கி விட்டாராம். இதனால் படக்குழுவினர் விரைவில் ஹைதராபாத் செல்ல உள்ளனர்.