fbpx

வெற்றிமாறன், ஷங்கரின் சூப்பர் ஹிட் படங்களை உதறி தள்ளிய மதுரை முத்து..!! காரணம் என்ன தெரியுமா..?

சின்னத்திரையில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக அறியப்பட்டு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் தான் மதுரை முத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அசத்தப்போவது யாரு’ என்கிற காமெடி ஷோ மூலம் தன்னுடைய காமெடியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்த, மதுரை முத்துவுக்கு வெளிநாடுகளில் கூட பல ரசிகர்கள் உள்ளனர். ஸ்டாண்ட் அப் காமெடியை தாண்டி, பட்டிமன்ற பேச்சாளராகவும் மிகவும் பிரபலமான இவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக வந்து தன்னுடைய பழைய காமெடியால், மொக்கை வாங்கினாலும் அதனை டேக் இட் ஈஸி போல் எடுத்துக்கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்.

இந்நிலையில், தனக்கு வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் ஷங்கர் கொடுத்த இரு வாய்ப்புகளை இழந்தது மிகவும் வருத்தமான ஒன்று என பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஆடுகளம்’. 6 பிரிவுகளின் கீழ் இப்படம் தேசிய விருதை வென்றது. இந்த படத்தின் ஒரு முக்கிய பணிக்காக தான் இயக்குனர் வெற்றிமாறன் மதுரை முத்துவை அணுகியுள்ளார். ஆடுகளம் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, தன்னுடைய துணை இயக்குனர் துரை செந்தில்குமார் மூலம், மதுரை முத்துக்கு அழைப்பு விடுத்த நிலையில், மதுரை முத்துவும் அவரை சென்று சந்தித்துள்ளார். அப்போது வெற்றிமாறன் பெரிய பைல் ஒன்றை கொடுத்து அதில் இருக்கும் வசனங்களை மதுரை பாஷையில் மாற்றிக் கொடுக்க கூறியுள்ளார். ஆனால், அப்போது ஒரு சில காரணங்களால் இந்த வேலையை செய்ய மறுத்து விட்டாராம் மதுரை முத்து.

இதைத்தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய நண்பன் படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைப்பு விடுத்த நிலையில், வெளிநாட்டில் காமெடி நிகழ்ச்சி ஒன்று புக் ஆகி இருந்ததால், அந்த வாய்ப்பையும் இழந்து விட்டதாக மிகவும் வருத்தத்தோடு கூறியுள்ளார்.

Chella

Next Post

அமெரிக்காவை ஏமாற்றிய நித்தியானந்தா..!! ஐ.நா. அங்கீகரித்தது போல் தோற்றம்..!! புதிய சர்ச்சையில் சிக்கிய கைலாசா..!!

Sat Mar 18 , 2023
இந்தியாவில் இருந்து தப்பியோடிய நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, கைசாலா அமெரிக்காவில் பல நகரங்களை ஏமாற்றி போலியான ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் கடந்த மாதம் 24ஆம் தேதி ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக, மற்றும் கலாச்சார உரிமைகள் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாகப் பெண்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த புகைப்படங்கள் நித்தியானந்தாவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி […]

You May Like