fbpx

ஒருவேளை சோறு கூட போட முடியாத ரஜினி..!! விஜய்யுடன் கம்பேர் பண்ணாதீங்க..!! வெளுத்து வாங்கிய முக்கிய புள்ளி..!!

சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருந்தாலும் ரஜினியை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமீப காலமாக ரஜினியையும், விஜய்யையும் ஒப்பிட்டு பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரஜினியோடு விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறிகள் இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பேசிய சவுக்கு சங்கர், அரசியலுக்கு வருவேன் என்று ரஜினி கூறி ஏமாற்றியது போல் விஜய் கிடையாது. பல வருடங்களாகவே இதற்கான வேலைகளை தான் அவர் பார்த்து வருகிறார். மீனவர்களுக்கு ஆதரவாக இருந்ததில் தொடங்கி அண்ணா ஹசாரே போராட்டம், 234 தொகுதிகளிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்தது வரை அனைத்துமே அவருடைய அரசியல் வருகையை உறுதிப்படுத்துகிறது. அப்படி இருக்கும்போது அவர் வருவாரா என்று ஏன் கேள்வி எழுப்புகிறீர்கள். இதெல்லாம் பார்த்தால் உங்களுக்கு தெரியவில்லையா என பேசியிருந்தார்.

அதுமட்டுமின்றி, ரஜினி தன் பாக்கெட்டில் இருந்து பத்து பைசா கூட எடுத்து செலவு செய்ய மாட்டார். அதேபோன்று ராகவேந்திரா மண்டபத்தில் கறி சோறு போடுகிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது வரை அதை செய்யவே கிடையாது. தன்னுடைய ரசிகனுக்கு ஒருவேளை சோறு கூட போட முடியாத ரஜினியோடு விஜய்யை கம்பேர் செய்யாதீங்க என்றும் அவர் கடுமையாக சாடியிருக்கிறார். இந்த விவகாரம் தான் இப்போது சோசியல் மீடியாவை ரணகளப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Chella

Next Post

சாம்பியன் பட்டத்தை மீண்டும் தட்டித்தூக்கிய மகளிர் அணி..!

Thu Jun 29 , 2023
கடந்த 7 ஆண்டுகளில் இந்திய கால்பந்தில் பலம் வாய்ந்த அணியாக உருவாகி உள்ள தமிழ்நாடு அணி, இந்த ஆண்டு சீனியர் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதியதால் போட்டி தொடங்குவதற்கு முன்பே யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. போட்டி தொடங்கியது முதல் தமிழ்நாடு அணி ஆதிக்கம் செலுத்தினாலும் போட்டியின் 50வது நிமிடத்தில் தமிழக வீராங்கனை துர்கா own goal […]

You May Like