fbpx

’10 கிலோ அரிசி வாங்குற பணம்’..!! விஜய்யை பார்த்து இப்படி சொல்லிட்டாரே..!! ப்ளூ சட்டை மாறனை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..!!

விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். ஒரு பக்கம் சினிமாவில் படு பயங்கரமாக செயல்பட்டு வந்தாலும், மற்றொருபுறம் அரசியல் நுழைவிற்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், நேற்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க பனையூர் இல்லத்திற்கு விஜய் சென்றிருந்தார். அந்தப் புகைப்படங்கள் தான் நேற்று இணையம் முழுக்க பரவி வைரலானது. மேலும், சமீபத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை விஜய் சந்தித்து ஊக்கத்தொகை வழங்கினார். அந்தச் சமயத்தில் அசுரன் பட டயலாக்கை கூறி, ரசிகர்களிடம் படிப்பு தான் முக்கியம் என்பதை வலியுறுத்தினார். மேலும், ஓட்டு போடுவதற்கு பணம் வாங்கக்கூடாது என்பதையும் அழுத்தமாக கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று விஜய்யின் கார் இசிஆர் சாலையில் அக்கரை என்ற பகுதியில் சிக்னலில் நிற்காமல் சென்றுள்ளது. மேலும், விஜய் இதற்கான அபராத தொகை 500 ரூபாயை ஆன்லைன் மூலம் விஜய் செலுத்தியிருக்கிறார். இந்த செய்தி தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ப்ளூ சட்டை மாறன் நக்கல் அடித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது, மாணவ செல்வங்களே சிக்னலை மதித்து வாகனங்களை ஓட்டுமாறு பெற்றோரிடம் சொல்லுங்கள், வேலைக்குச் செல்லும் இளைஞர்களே வேகத்தை விட விவேகம் அதாவது படத்தை சொல்லவில்லை. ஏன்னா நமக்கு 500 ரூபாய் என்பது 10 கிலோ அரிசி வாங்குற பணம் என்று கேலி செய்திருக்கிறார்.

அதாவது ஊருக்கு தான் உபதேசம் நமக்கு இல்லை என்பது போல விஜய் இந்த காரியத்தை செய்துள்ளார் என்று ப்ளூ சட்டை கூறி இருக்கிறார். இப்போது இவருக்கு ஆதரவாக அஜித் ரசிகர்களும் விஜய்யை விமர்சித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அரசியலுக்கு வரும் நேரத்தில் விஜய்க்கு இந்த கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது.

Chella

Next Post

மனைவியால் 10 ஆண்டுகளில் 7 முறை சிறைவாசம் அனுபவித்த கணவன்..!! கடைசியில் செம ட்விஸ்ட்..!!

Wed Jul 12 , 2023
குஜராத் மாநிலம் மெஹாசனாவில் ஒரு பெண் தனது கணவரை 10 ஆண்டுகளுக்குள் குடும்ப வன்முறைக்காக 7 முறை கைது செய்த விசித்திரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு கைதுக்குப் பிறகும், அவர் உத்தரவாதமளிப்பவராக நுழைந்து, அந்த நபரை விடுவிக்க ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது. பிரேம்சந்த் மாலி மற்றும் அவரது மனைவி சோனு தம்பதியினர் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 2021இல் திருமணமான […]

You May Like