fbpx

லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு அரேஞ்ச் செய்து கொடுத்த அம்மா..!! ஜாலி செய்யும் பிக்பாஸ் ஜோடி..!!

விஜய் டிவியில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் கலகலப்பாக ஆரம்பிக்கப்படும் அந்த ஷோ, போக போக சண்டை, அழுகை என ரணகளமாக மாறிவிடும். அதற்கு இடையில் சில காதல் காட்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது. இவ்வாறு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலிக்க ஆரம்பித்த ஜோடி தான் அமீர்-பாவனி. முதலில் அமீரின் காதலை ஏற்காத பாவனி, நாளடைவில் அவருடைய குணத்தை புரிந்து கொண்டு காதலுக்கு சம்மதித்தார். அதைத்தொடர்ந்து அந்த ஜோடி அஜித்தின் துணிவு திரைப்படத்திலும் கூட சிறு கேரக்டரில் நடித்தார்கள்.

அதன் பிறகு இப்போது வெள்ளித்திரையில் அவர்களுக்கான அடுத்தடுத்த வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் கூட இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க போகும் படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், தற்போது இவர்களின் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றிய செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது. தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து வாழும் இந்த ஜோடி பிரபல சேனலுக்கு தங்களின் வீட்டை சுற்றி காண்பித்து பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில், தங்களுடைய லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றிய ரகசியத்தை உடைத்து இருக்கின்றனர்.

அதாவது சென்னையில் தனி பிளாட்டில் வசித்து வந்த பாவனியை அவரது அம்மாவே அமீருடன் சேர்ந்து தங்கிக் கொள்ளுமாறு கூறினாராம். அவரின் பாதுகாப்புக்காகவே இப்படி ஒரு யோசனையை அவர் கூறியிருக்கிறார். அந்த வகையில், லிவிங் ரிலேஷன்ஷிப்பிற்கு அரேஞ்ச் செய்தது அவரின் அம்மா தான் என்று பாவனி பப்ளிக்காக உளறி கொட்டியிருக்கிறார். மேலும், அமீர் தன் பெரியம்மா மற்றும் அண்ணனையும் அந்த வீட்டில் தங்களுடன் தங்க வைத்திருக்கிறாராம். அது மட்டுமல்லாமல் அவருடைய கார்டியன் குடும்பமும் சென்னை வந்தால் அங்கு தான் தங்குவார்களாம். இப்படித்தான் தங்களுடைய லிவிங் ரிலேஷன்ஷிப் குடும்பமாக மாறி இருக்கிறது என்று இந்த ஜோடி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறது.

Chella

Next Post

ஆக்கிரமிப்பை அகற்றக் கூறி பொதுநல வழக்கு தொடர்ந்த நபர் வெட்டி படுகொலை…..! செங்கல்பட்டில் பரபரப்பு……!

Mon May 1 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ருத்ரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சர்புதீன்(34). இவர் இரும்பு மற்றும் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். இவர் சென்ற சில வருடங்களுக்கு முன்னர் திருக்கழுக்குன்றம் 10வது வார்டு கவுன்சிலரின் மகன்களான அகமது பாஷா,பருக்குடன் இணைந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வந்தார். என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், இருவருக்கும் இடையில் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக […]

You May Like