பிரபல கர்நாடக பாடகரான அருணா சாய்ராமுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாடகலான அருணா சாய்ராமுக்கு 70 வயதாகின்றது. பிரான்ஸ் நாட்டின் உயரிய ’செவாலியே ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக இசையில் 30 ஆண்டுகளாக பாடகாரகவும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் அருணா சாய்ராம். இவர் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை அவர் பெற்றிருக்கின்றார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிசின் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.
கர்நாடக சங்கீத உலகில் மரியாதையின் உச்சத்தில் இருப்பவர். நிறைய பக்தி சார்ந்த பாடல்களை அவர் பாடியிருக்கின்றார். ’மாடு மேய்க்கும் கண்ணே’ என்ற பாடலை பாடியது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. திரையுலகில் தமிழில் ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் மூலம் முதன் முறையாக திரையுலகில் கால்பதித்தார். ’ ஐகிரி நந்தினி’ பாடலை பாடி தினந்தோறும் பக்தி பரவசமாக்கினார்.
இவர் பாடும்போது தெய்வீக குலை் தெய்வீக உணர்வை நமக்குள் கடத்தி விடுவதாக தெரிவிப்பார்கள். அவரது திறமையை கவுரவிக்கும் விதமாக பிரான்ஸ் அரசின் உயிரிய விருதான செவாலிய விருதை வழங்குவதாக அறிவித்துள்ளார். பாடும் திறமைக்காக மட்டுமில்லாமல் இந்திய பிரான்ஸ் உறவின வளர்ச்சிக்காக பெற்றிருக்கின்றார்.