fbpx

கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறும் ரச்சிதா..!! பிக்பாஸ் வீட்டில் எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் ஷாக்..!!

பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா குழந்தை குறித்து பேசி உள்ளதால், இனி அவர் கணவரோடு சேர்த்து வாழவே மாட்டாரா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர் ரச்சித்தா, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்களுக்குள் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்திகள் பரவின. அதேபோல, சொல்ல மறந்தக் கதையில் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா இந்த கதாபாத்திரமும், என் வாழ்க்கையும் ஒன்றுதான் என கூறியிருந்தார்.

கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறும் ரச்சிதா..!! பிக்பாஸ் வீட்டில் எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் ஷாக்..!!

இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து பேசிய ரச்சித்தாவின் கணவர் நடிகர் தினேஷ், சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து இருக்கிறோம். எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நானும், ரச்சிதாவும் சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனால், இருவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சேர்த்துவிடுவார்கள் ரசிகர்கள் நினைத்து இருந்தனர். இதற்கிடையே, ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார். இதனால் போட்டியாளர்கள் பலரும் அவர் இயல்பாகவே இல்லை என்றும், பிக்பாஸ் வீட்டில் அவர் சேஃப் கேம் விளையாடி வருவதாகவும் கூறி அவரை அடிக்கடி நாமினேட் செய்து வருகின்றனர்.

கணவரை சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறும் ரச்சிதா..!! பிக்பாஸ் வீட்டில் எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் ஷாக்..!!

இந்நிலையில், ரச்சிதா குழந்தை குறித்து பேசி உள்ள தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, என்னோட 35-வது வயதில் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்பேன் என்றார். தத்து எடுப்பதற்கு என்று நிறைய விதிமுறை இருக்கு அதற்காக காத்து இருக்கிறேன் என்றும், அதுவும் பெண் குழந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் விக்ரமனிடம் தனது வாழ்க்கையின் லட்சியத்தைப் பற்றி பேசி இருந்தார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலர் ’ரச்சித்தா உங்களுக்கு தங்கமான மனசு’ என்று வாழ்த்து தெரிவித்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் குழந்தையை தந்து எடுப்பேன் என்றால் என்ன அர்த்தம், கணவரோடு சேர்த்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டீர்களா? இனி கணவரோடு சேர்த்து வாழும் எண்ணமே இல்லையா? என கேட்டு வருகின்றனர்.

Chella

Next Post

விஜய் டிவி பிரபலத்தை தட்டித்தூக்கிய போலீஸ்..!! 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த காமெடி நடிகர்..!!

Sun Dec 18 , 2022
விஜய் டிவியின் மூலம் பல பிரபலங்கள் இப்போது பெரிய திரையில் கலக்கி வருகின்றனர். சிலர் அதே சேனலில் பல ஷோக்களில் கலந்து கொண்டு ஆடியன்ஸை கவர்ந்து வருகின்றனர். அப்படி விஜய் டிவியின் மூலம் பிரபலமான நடிகர் ஒருவர் இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பெண் வேடமிட்டு நடித்தவர் தான் நாஞ்சில் விஜயன். இப்போதும் பல நிகழ்ச்சிகளில் […]
விஜய் டிவி பிரபலத்தை தட்டித்தூக்கிய போலீஸ்..!! 2 ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்த காமெடி நடிகர்..!!

You May Like