fbpx

திருமணத்திற்கு முன்பே லிவிங் டு கெதரில் இருந்த ரஜினி பட நடிகை..!! அதுவும் பிரபல இசையமைப்பாளரின் மகனுடன்..!!

காதல், கல்யாணம் என்ற காலம் போய் தற்போது லிவிங் டு கெதர் வாழ்க்கை சாதாரணமாக மாறிக்கொண்டே வருகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. அதாவது மனம் ஒத்துப்போனால், திருமணம் ஆகாமலேயே ஒரே வீட்டில் இருந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருவார்கள்.

அப்படித்தான் 80-களில் தூறல் நின்னு போச்சு என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுலக்சனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட போன்ற அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். அத்துடன் ரஜினிக்கு ஜோடியாக தம்பிக்கு எந்த ஊரு மற்றும் கமல் படத்தில் தூங்காதே தம்பி தூங்காதே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அப்படிப்பட்ட இவர், பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதனின் மகனான இயக்குநர் கோபி கிருஷ்ணனை காதலித்து வந்தார்.

ஆனால், இவர்களின் காதலுக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் சம்மதம் கொடுக்காததால், இவர்கள் திருமணம் செய்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு சுலோக்ஷனா நம்மளுடைய காதலை இப்படியே விட்டு விடலாம் என்று கூறியிருக்கிறார். அத்துடன் உங்கள் வீட்டில் சொன்னபடி வேற யாரையாவது நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியிருக்கிறார். ஆனால், அவர் விடாப்பிடியாக திருமணம் செய்தால் உன்னை தான் பண்ணுவேன் என்று இருந்துள்ளார். அப்பொழுது இருவரும், ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு திருமணம் செய்திருக்கிறார்கள்.

ஆனால், அதற்கு முன்னதாகவே ஒரு தனி வீட்டில் இவர்கள் இருவரும் ஒரு மாதம் வரை லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கையை நடத்தியிருக்கின்றனர். அதன்பிறகு இரண்டு மாதங்கள் கழித்து எம் எஸ் விஸ்வநாதன் வீட்டில் நடிகை சுலோக்ஷனாவை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், சில வருடங்களுக்குப் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து தற்போது நடிகை சுலக்ஷ்னா தனியாக வாழ்ந்து வருகிறார்.

Chella

Next Post

காதலனுடன் நெருக்கமாக பழகிய கல்லூரி மாணவி….! வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த போலி காவல்துறை அதிகாரி….!

Sat Jul 15 , 2023
தலைநகர் டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் என்ற பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவரும் இவரது காதலனும் சென்ற ஏழாம் தேதி காரில் ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர்கள் காரில் நெருக்கமாக இருந்ததை கவனித்த ஒரு நபர் ஆபாச வீடியோவாக ஆதமை பதிவு செய்து வைத்திருக்கிறார். இவர்களுடைய காரை பின் தொடர்ந்து வந்த அந்த நபர் அந்த மாணவியின் காதலன் அந்த மாணவியை […]

You May Like