fbpx

வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்தில் இணைந்த ரஜினி, கமல், தனுஷ்..! சுவாரஸ்ய தகவல்..!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

’அசுரன்’ திரைப்படத்திற்கு பின் இயக்குநர் வெற்றிமாறன் ‘விடுதலை’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து, இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உட்பட பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். இப்படத்தை வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்தில் இணைந்த ரஜினி, கமல், தனுஷ்..! சுவாரஸ்ய தகவல்..!

இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் பாடியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இளையராஜாவின் இசையில் இந்த படத்திற்காக கம்போஸ் செய்யப்பட்ட பாடல்களை ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ் ஆகியோர் பாடி உள்ளதாகவும், இதில் தனுஷ் பாடிய ஒரு பாடல் சிங்கிள் பாடலாக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது ‘விடுதலை’ படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் பாடியிருப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறனின் ’விடுதலை’ படத்தில் இணைந்த ரஜினி, கமல், தனுஷ்..! சுவாரஸ்ய தகவல்..!

‘விடுதலை’ படத்தை எடுக்க ரூ.4 கோடி வரை செலவாகும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை படப்பிடிப்பு செலவு ரூ.40 கோடியைக் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைவில்லை என்பதால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே  ‘விடுதலை’ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு முன்வந்ததாகத் தெரிகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் நடிகர் சூரி போலீசாகவும், விஜய் சேதுபதி கைதி போன்றும் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கை கால் நரம்புகளை அறுத்து பெண் கொடூர கொலை.. போலீசார் விசாரணை..!

Fri Sep 9 , 2022
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கான்பாநகரை சேர்ந்த ரஞ்சிதம் என்பவர் தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வந்தார். காலை ஒன்பது மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டியிருந்தது. அதனால் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தனர். அங்கு, ரஞ்சிதத்தின் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகளை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். […]

You May Like