fbpx

’யூகி திரைப்படத்தின் போது நான் கர்ப்பம்’ நடிகை ஆனந்தி கொடுத்த ஷாக்…

யூகி திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தபோது கர்ப்பமாகிவிட்டேன் என்று தெரிவித்து நடிகை ஆனந்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான நடிகை ஆனந்தி ஆந்திர மாநிலம் தெலுங்கானாவைச் சேர்ந்தவர். இவர் தெலுங்குப்படத்தின் ’ஈ ராஜுலு’’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். தமிழில் 2014ல் வெளியான ’பொறியாளன்’ திரைப்படம்தான் இவருக்கு தமிழ் மொழியில் முதல் படம். தொடர்ந்து ’கயல்’ என்ற திரைப்படத்திலும் நடித்தார்.

இந்த கயல் படத்திற்கு பின்னர் ஆனந்தியை தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார். த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலி ஃப்ரம் நடுக்காவேரி திரைப்படத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.

சாக்ரடீஸ் ‘மூடர்கூடம்’ நவீனின் மைத்துனர் ஆவார். இவர் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். திருமணம் குறித்து பேசிய ஆனந்தி, நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது. பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.

திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன் பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஆனந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருந்ததாக அறிவித்து இருந்தார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இவர்களின் மகனுக்கு பிளாட்டோ என பெயரிட்டுள்ளனர். கயல் ஆனந்தி திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். யூகி என்ற திரைப்படத்திலும் நடி்ததுள்ளார். வரும் 18ம் தேதி யூகி திரைப்படம் வெளியாக உள்ளது. கதிர், நரேன், கயல் ஆனந்தி நட்டி நடராஜன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

ட்ரெயிலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கயல் ஆனந்தி கூறுகையில், ’’ கயல் திரைப்படம் நடித்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்டது. ஆனாலும் அதே அன்மை தமிழ் ரசிகர்களிடம் பெறுகின்றேன். இது எனக்கு ஸ்பெஷலான திரைப்படம் . இந்த படம் நடிக்கும்போதே நான் கர்ப்பாக இருந்தேன். எனக்கு இந்தப்படம் நல்ல நினைவாக இருக்கும்.

Next Post

நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… இந்த மாவட்டத்திற்கு மட்டும்..

Sun Nov 13 , 2022
கனமழை பெய்து வருவதை ஒட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில் பல்வேறு […]

You May Like