fbpx

ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த வெங்கட் பிரபு..!! ’தளபதி 68’ அப்டேட் ரெடி..? அது என்ன 11 மணி..?

ஆக்‌ஷன் ஜானரில் கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள லியோ ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்டன. முன்னதாக லியோ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே விஜய்யின் 68-வது படம் குறித்த அப்டேட் வெளியானது. அதன்படி, ஏஜிஎஸ் தயாரிக்கும் தளபதி 68 படத்தை யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.

முதன்முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள வெங்கட் பிரபு, அஜித்துக்கு மங்காத்தா ஹிட் கொடுத்ததைப் போல தளபதி 68-ஐ இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, தளபதி 68 ஷூட்டிங் அக்டோபரில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது திடீரென இயக்குநர் வெங்கட் பிரபு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ளார்.

அதில், “இனிமேல் அடுத்து என்ன… நாளை (ஜூலை 30) காலை 11 மணிக்கு வெளியாகும்” என ட்வீட் செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள், இது விஜய்யின் தளபதி 68 அப்டேட்டா என கேட்டு வருகின்றனர். சிலர் இது தளபதி 68 அப்டேட் தான் எனக் கூறி வரும் நிலையில், இன்னும் சிலரோ அதற்கு வாய்ப்பில்லை என கமெண்ட் போட்டு வருகின்றனர். வெங்கட் பிரபு கன்னட நடிகர் கிச்சா சுதீப் உடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் வெங்கட் பிரபு – கிச்சா சுதீப் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய அப்டேட்டாக இது இருக்கும் என தெரிவித்துள்ளனர். எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

Chella

Next Post

வீட்டுமனை அனுமதி வழங்க லஞ்சம் கேட்ட ஊராட்சி மன்ற தலைவர்….! சிக்கியது எப்படி…..?

Sat Jul 29 , 2023
செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கின்ற சீவாடி ஊராட்சியில் நிகமதுல்லா என்பவர் நிலம் வாங்கி வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் தான் நிகமதுல்லா அந்த நிலத்தை வீட்டுமனைகளாக பிரித்து விற்பனை செய்ய சீவாடி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்குவதற்கு ஊராட்சி மன்ற தலைவர் அரங்கநாதனை சந்தித்துள்ளார். அப்போது அரங்கநாதன் முப்பதாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது. […]

You May Like