நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இதற்கான ப்ரி புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
![உங்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? ஜெயிலர் பட ஷூட்டிங் எப்போது? - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி](https://1newsnation.com/wp-content/uploads/2021/12/take-selfies-and-chat-with-the-superstar-rajinikanth-to-meet-his-fans-for-4-days-from-may-15-1024x768.gif)
இந்நிலையில், ஆந்திரபிரதேச முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அனுபெம்கேர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று நடிகர் ரஜினிகாந்த் டெல்லி சென்றார். தென் மாநிலங்களைச் சேர்ந்த என்.சி.சி மாணவர்களையும் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் கலந்துரையாடினார். இந்நிலையில், இன்று டெல்லியிலிருந்து விமானம் மூலம் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சரியாக தெரியவில்லை என பதிலளித்தார். உங்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என கேட்கப்பட்டபோது படப்பிடிப்பில் கலந்துகொள்வதுதான் அடுத்தக்கட்ட திட்டம் என்றார். உடல் நலம் குறித்து கேட்டபோது தாம் நன்றாக உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.