தமிழ்நாட்டில் பத்து முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் இடையிடையே மூடப்பட்டன. இதனால் கற்றலும் கற்பித்தலும் பாதிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன என்ற அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று சென்னையில் அறிவித்துள்ளார்.
மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற உள்ளது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத உள்ளனர்.
11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நிலையில், ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.
10ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்குகின்றன. ஏப்ரல் 20ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.

- ஏப்ரல் 6 – மொழித்தாள்
- ஏப்ரல் 10 – ஆங்கிலம்
- ஏப்ரல் 13- கணிதம்
- ஏப்ரல் 15- விருப்ப மொழித்தாள்
- ஏப்ரல் 17- அறிவியல்
- ஏப்ரல் 20- சமூக அறிவியல்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

- மார்ச் 13 – மொழித்தாள்
- மார்ச் 15- ஆங்கிலம்
- மார்ச் 17- தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், பயோ கெமிஸ்ட்ரி
- மார்ச் 21 – இயற்பியல், பொருளாதாரம்
- மார்ச் 27 – கணிதவியல், விலங்கியல், நர்சிங்
மார்ச் 31- உயிரியல், வரலாறு, வணிகக் கணிதம்,தாவரவியல் - ஏப்ரல் 3- வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்